சென்னை உணவு திருவிழா.. இரவு முழுக்க போன "மெசேஜ்".. பீப் பிரியாணிக்கு அனுமதி கிடைத்தது எப்படி?
சென்னை: சிங்கார சென்னையின் உணவு திருவிழா 2022 சென்னையில் நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடக்க கூடிய உணவு திருவிழா ஆகும் இது.
Recommended Video
நேற்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்த உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார். நேற்று நடைபெற்ற அரங்கில் பீப் பிரியாணி இந்த திருவிழாவில் இடம்பெறவில்லை.
இது பெரிய சர்ச்சையானது. இந்த நிலையில் பீப் பிரியாணிக்கு தற்போது உணவு திருவிழாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கு பின் நடந்தது என்ன? இந்த அனுமதி கிடைத்தது எப்படி என்று பார்க்கலாம்.

சர்ச்சை
உணவு திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறவில்லை என்றதும் நெட்டிசன்கள் பலர் கோபம் அடைந்தனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது என்ன உத்தர பிரதேசமா? பீப் பிரியாணிக்கு அனுமதி கொடுக்காமல் இருப்பது தவறு என்று பலரும் விமர்சனங்களை வைத்தனர். சில திமுகவை சேர்ந்த நிர்வாகிகளும், திமுக அனுதாபிகளும் கூட இது தொடர்பாக விமர்சனங்களை வைத்தனர். இது பெரிய சர்ச்சையானது.

பதில்
இதையடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியம் அளித்த விளக்கத்தில் நாங்கள் பீப் பிரியாணியை தடை செய்யவில்லை. இங்கே நிறைய ஸ்டால்கள் உள்ளன. இதில் பீப் பிரியாணி வைக்க வேண்டும் என்று யாரும் விண்ணப்பம் கொடுக்கவில்லை. விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறோம். மற்றபடி பீப் பிரியாணியை வேண்டும் என்றே தடை செய்யவில்லை என்று கூறினார். உணவுத்துறை அதிகாரிகளும் இதைத்தான் தெரிவித்தனர்.

எதிர்ப்பு
ஆனால் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத சிலர் கடுமையான விமர்சனங்களை அரசுக்கு எதிராக வைத்தனர். அங்கே 180 ஸ்டால் உள்ளது. ஒன்றில் கூடவா பீப் பிரியாணி இடம்பெறாது. இது என்ன கொடுமை. இதுதான் திராவிட ஆட்சியா? முன்பே ஆம்பூர் உணவு திருவிழாவில் பீப் பிரியாணிக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் அந்த திருவிழாவை தடையும் செய்தீர்கள். இது எப்படி நியாயம் ஆகும் என்று கேள்வி எழுப்பினர்.

விமர்சனம்
அதோடு இந்த விவகாரத்தை அமைச்சர்களுக்கு டேக் செய்து திமுகவினர் பலர் நேற்று இரவு முழுக்க சமூக வலைத்தளங்களில் மெசேஜ்களாக அனுப்பி வந்தனர். இந்த நிலையில் தற்போது பீப் பிரியாணியும் உணவு திருவிழாவில் இன்றும், நாளையும் இடம்பெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக மூன்று ஸ்டால்கள் போடப்பட்டு உள்ளன. இன்று முதல் அங்கு சுக்குபாய் நிறுவன பீப் உள்ளிட்ட பல்வேறு பீப் விற்பனை செய்யப்படும்.

அனுமதி காரணம்
ஆனால் இந்த அனுமதிக்கு பின் வேறு காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பீஸ் ஸ்டால் போட யாருமே அனுமதி கேட்கவில்லை. 180 ஸ்டால்களுக்கு முன்பே அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. பின்னர் நேற்று சர்ச்சைக்கு பின்பே சில நிறுவனங்கள் பீப் ஸ்டால் போட அனுமதி கேட்டனர். அதன்பின்பே அனுமதி கொடுக்கப்பட்டது. இதுதான் உண்மை. இதற்கு பின் வேறு அழுத்தங்கள் எதுவும் இல்லை என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications