3 நாள் விடுமுறை.. சென்னையில் இருந்து 610 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம்! போக்குவரத்து துறை அறிவிப்பு
சென்னை: நாளை முதல் தொடர்ந்து 3 நாள் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ந்து 3 நாள் விடுமுறையாகும்.
இதனால் சென்னை, கோவை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தங்கி வேலை செய்யும் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல முடிவு செய்துள்ளனர்.

உயர்ந்த கட்டணம்
குறிப்பாக சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர் புறப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் தனியார் ஆம்னி பஸ்களின் கட்டணம் 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சொந்த ஊர் செல்ல வேண்டும் என்ற ஆவலில் வேறு வழியின்றி மக்கள் பயணம் செய்ய உள்ளனர்.

அமைச்சர் எச்சரிக்கை
இதற்கிடையே தான் மக்களிடம் அதிக கட்டணம் வாங்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அதுபற்றி வட்டார போக்கவரத்து அலுவலகத்தில் புகார் அளி்க்கலாம் என அவர் கூறியுள்ளார். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பை கண்காணிக்க இணை போக்குவரத்து ஆணையர், துணை போக்கவரத்து ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

610 பேருந்துகள் இயக்கம்
இந்நிலையில் தான் 3 நாள் தொடர் விடுமுறையால் தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து 610 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவிப்பு செய்துள்ளது.

திங்கட்கிழமையும் ரிட்டன் பஸ்
மேலும் விடுமுறை முடிந்து வெளியூரில் இருந்து மக்கள் சென்னை திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் திங்கட்கிழமை தமிழ்நாட்டின் பிற இடங்களில் இருந்து சென்னையை நோக்கி பயணிக்க உள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications