3 போட்டிகளில் 22 ரன்கள்.. "கேஎல் ராகுல் இந்திய அணிக்கு தேவையா?" தொடர்ந்து சொதப்ப காரணம் என்ன?
சென்னை: டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய வீரர் கேஎல் ராகுல் தொடர்ந்து சொதப்புவதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடர் சிறிய அணிகளின் செயல்பாடுகள் மற்றும் மழைக் காரணமாக உச்சக்கட்ட சுவாரஸ்யத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்வே, இங்கிலாந்தை வீழ்த்திய அயர்லாந்து, இந்தியாவை பதற வைத்த நெதர்லாந்து, மழையால் நின்றுபோன ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளின் ஆட்டங்கள் அனைத்தும் டி20 உலகக்கோப்பைத் தொடர் உயிர்ப்புடன் இருப்பதற்கு மிக முக்கிய காரணங்கள்.
அதேபோல் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அனைத்து நாட்டு தொடக்க வீரர்களும் சொதப்பி வருவதும் இன்னொரு சுவாரஸ்யம். முதல் 10 ஓவர்களில் ஒருநாள் போட்டியை போன்றும், அடுத்த 10 ஓவர்களை டி20 ஆட்டம் போன்றும் ஆடுவது ரசிகர்களை பதற்றத்திலேயே வைத்துள்ளது. ஏனென்றால் சிறிதாக பிசிறு தட்டினாலும் நிச்சயம் தோல்விதான்.

இந்திய அணி தோல்வி
நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அனி படுதோல்வியை சந்தித்தது. இதற்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பில்லாத ஆட்டமும், இந்திய அணியின் ஃபீல்டிங்கும் மிகமுக்கியக் காரணம். அதில் கேஎல் ராகுல் பேட்டிங் மீது அதிகளவிலான விமர்சனங்கள் அனைத்து தரப்பிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கேஎல் ராகுலின் பேட்டிங்கில் என்னதான் பிரச்சினை என்று பார்த்தால், யாருக்கும் எதுவும் தெரியாது.

3 போட்டிகளில் 22 ரன்கள்
இதுவரை இந்திய அணி விளையாடியுள்ள 3 போட்டிகளில் கேஎல் ராகுல் அடித்துள்ள ரன்கள் 4, 9, 9. மொத்தமாக 3 போட்டிகளிலும் சேர்த்து 22 ரன்கள் விளாசி இருந்தாலும், கேஎல் ராகுலுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்பதே இந்திய அணியின் திட்டமாக இருக்கிறது. இதற்கு காரணம், டெக்னிக்கலாக கேஎல் ராகுல் பேட்டிங்கில் எந்த பிரச்சினையும் இல்லை. அப்படி பிரச்சினை இருந்தாலும், அதனை வேகமாக சரிசெய்து களத்தில் தன்னை அனைவர் முன்பும் நிரூபித்து காட்டக் கூடியவர்.

மனநிலை பிரச்சினை
அதனால் மட்டுமே கேஎல் ராகுல் இந்திய அணியில் தொடர்ந்து பயணிக்க முடிகிறது. டெக்னிக்கலாக பிரச்சினை இல்லையென்றால், கேஎல் ராகுலிடம் ஏன் ரன்கள் சேர்க்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. அவரின் பிரச்சினை மனரீதியிலானது. அசாத்திய திறமை கொண்ட விராட் கோலியே சில மாதங்களுக்கு முன் மனநிலை சரியாக இல்லை என்று பேசி இருந்தார். அதுதான் இப்போது கேஎல் ராகுலுக்கு ஏற்பட்டுள்ளது.

எப்போது தோல்விகளை சந்திக்கிறார்?
தேவையில்லாத பிரஷரையும், பொறுப்பையும் எடுத்துக் கொண்டதே கேஎல் ராகுலுக்கு டி20 உலகக்கோப்பையில் பிரச்சினையாக மாறியுள்ளது. தொடர்ந்து உச்சத்தில் இருக்க வேண்டும் என்று முனைப்பும், தோல்வியடைந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையுமே கேஎல் ராகுல் மோசமாக செயல்படுவதற்கு காரணமாக இருக்கிறது. ஐபிஎல் தொடரிலும் சரி, இந்திய அணியிலும் சரி, கேஎல் ராகுல் எப்போதெல்லாம் உச்சத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அப்போது எல்லாம் தோல்விகளை சந்திப்பார்.

கவலையின்றி ஆடுவாரா?
உடனடியாக இவற்றை கடந்து வருவதற்கான வழி அணி நிர்வாகம் இவர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகள் வழங்குவது மட்டுமே. அதேபோல் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டுவிட்டால், அடுத்து வரும் போட்டிகளில் இன்னும் கம்பீரமாக இந்திய அணி களமிறங்கும். ரிஷப் பன்ட்டை போல் ஆட்டமிழந்தாலும் பிரச்சினை இல்லை என்று கேஎல் ராகுல் பேட்டை சுழற்ற தொடங்கினால், கேஎல் ராகுலின் அதிரடிக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் எழுந்து நின்று கைதட்டும். அதற்கு கேஎல் ராகுல் தான் மனசு வைக்க வேண்டும்.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications