Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவில் ட்விஸ்ட்! "இந்த 2 பேருமே வேணாம்".. அந்த 2 பேர் தலைமையில் மேற்கு மண்டலத்தில் ரகசிய ஆலோசனை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிச்சாமியும் வேண்டாம், ஓபிஎஸ்ஸும் வேண்டாம், 3ஆவது நபரே பொதுச் செயலாளராக வர வேண்டும் என்பதால் மேற்கு மண்டலத்தில் ரகிசய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    #AIADMK ஒற்றைத்தலைமை விவகாரம்..என்ன நடக்கிறது? #EPS #OPS

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சுவார்த்தை சூடுபிடித்து வருகிறது. கடந்த இரு தினங்களாக அன்றாடம் புதிய புதிய தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

    நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வீடுகளில் தனித்தனியே ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தும் முயற்சி கூட நடந்ததாக சொல்லப்பட்டது.

    எடப்பாடி பழனிச்சாமி

    எடப்பாடி பழனிச்சாமி

    இந்த நிலையில் இன்னொரு தகவலும் தற்போது கசிந்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமியும் வேண்டாம் ஓபிஎஸ்ஸும் வேண்டாம் , இவர்களை தவிர்த்து 3ஆவதாக ஒரு நபர்தான் தலைவராக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதாம். இது தொடர்பாக மேற்கு மண்டலத்தில் ரகசிய கூட்டம் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

     ஒருங்கிணைப்பாளர்

    ஒருங்கிணைப்பாளர்

    ஒருங்கிணைப்பாளர் பதவியையும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியையும் பொருளாளர் பதவியையும் ஓ பன்னீர் செல்வம் வைத்துள்ளார். அது போல் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் எடப்பாடி பழனிச்சாமி வைத்துள்ளார். மற்றவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை என்பதே இந்த மேற்கு மாவட்டத்தினரின் ஆதங்கமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

     ரகசிய கூட்டம்

    ரகசிய கூட்டம்

    இந்த ரகசிய கூட்டத்தை வேலுமணியும் விஜயபாஸ்கரும் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. காரணம், வேலுமணியும் விஜயபாஸ்கரும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள். அவ்வாறிருக்கும் போது அவர்கள் எப்படி தனித்து கூட்டம் நடத்துவார்கள்?

    எப்படி எதிர்ப்பு

    எப்படி எதிர்ப்பு

    டெல்லி தலைமை ஆதரவே எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கும் நிலையில் அவரை மற்ற நிர்வாகிகள் எப்படி பகைத்துக் கொள்வார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. தொண்டர்களில் கூட ஒரு சாரார் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இன்னொரு சாரார் ஓபிஎஸ்ஸுக்கும் ஆதரவாக உள்ளனர். நடுநிலையாக உள்ள தொண்டர்கள் இவர்கள் இருவரும் வேண்டாம், மூன்றாவது நபர் தலைவராக வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் நாம் பேசிய வரையில் எடப்பாடி பழனிச்சாமியே கட்சியை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். இதற்காக ஓபிஎஸ்ஸை எப்படியும் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்து விடுவார்கள் என்கிறார்கள். ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்களோ, இந்த முறை விட்டுக் கொடுக்கக் கூடாது என வரிந்து கட்டியுள்ளனர். என்னவாக போகிறதோ!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+