ஹாங்காங் சார்பில் களமிறங்கிய மதுரை வீரர்கள்; செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சுவாரஸ்யம்
சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், சீனாவின் ஹாங்காங் சார்பில் இந்திய நாட்டை சேர்ந்த தாய்-மகன் என இருவர் களம் இறங்கியுள்ளனர்.
இந்தியாவில் சர்வதேச செஸ் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து 4 மாதங்களுக்கு முன்னர்தான் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை அரசு தீவிரமாக முன்னெடுத்தது. அதன் அடிப்படையில் போட்டி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் 78 வயதான மூதாட்டியும் பங்கேற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தார். இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் ஹாங்காங் தரப்பில் விளையாடி வருகின்றனர்.

சாம்பியன்
ஒலிம்பியாட் போட்டியில் ஹாங்காங்கிற்காக இந்தியாவை சேர்ந்த 'சிகப்பியும்', அவரது மகன் 'தண்ணீர்மலையும்' விளையாடி வருகின்றனர். சிகப்பியின் கணவர் 'கண்ணப்பன்' ஹாங்காங் செஸ் கூட்டமைப்பின் பொருளாளராக உள்ளார். மதுரையில் பிறந்த சிகப்பி, இளம் வயதிலேயே செஸ் கற்று மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று அதில் முதலிடம் பிடித்தவர். இவர் ஒரு காலத்தில் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழ்நாடு சாம்பியனாகவும் இருந்திருக்கிறார்.

வெள்ளி பதக்கம்
இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் சிறு வயது முதல் செஸ் விளையாடி வருகிறேன். எனக்கு அதில் ஆர்வம் அதிகம். முன்பொரு காலத்தில் நான் தமிழ்நாட்டின் சார்பாக விளையாடி இருக்கிறேன். அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடினேன். இதில் எங்கள் பல்கலைக்கழகம் வெள்ளி வென்றது. மெட்ராஸ் பல்கலைக்கழகம் தங்கம் வென்றது" கூறியுள்ளார்.

ஹாங்காங்
இவர் ஒரு திறமையான செஸ் விளையாட்டு வீரர் என கிராண்ட்மாஸ்டர் மீனாட்சி, சிகப்பிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இப்படி விளையாடி வந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சிகப்பி கணவர் கண்ணப்பனுடன் நைஜீரியா சென்றுவிட்டார். இது குறித்து கண்ணப்பன் கூறுகையில், "நாங்கள் ஐந்து ஆண்டுகள் நைஜீரியாவில் இருந்தோம், பின்னர் சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங்கிற்கு குடிபெயர்ந்தோம்" என்று நினைவு கூர்ந்துள்ளார். தற்போது களத்தில் விளையாடி வரும் சிகப்பிக்கு இது இரண்டாவது ஒலிம்பியாட் போட்டியாகும். கடந்த 2016ல் அஜர்பைஜானில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் இவர் விளையாடி இருக்கிறார்.

களத்தில் மகன்
சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னர் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள இவர் நடப்பு ஒலிம்பியாட் போட்டி ஆட்டங்களில் 2 முறை வெற்றி பெற்று 1 ஆட்டத்தை டிரா செய்துள்ளார். சொந்த நாட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்ததாக குறிப்பிட்டுள்ள சிகப்பி, நீண்ட நாட்களுக்கு பின்னர் போட்டியில் நுழைவது சற்று கடினமாக இருந்ததையும் விளக்கியுள்ளார். மறுபுறம் 1,699 ELO மதிப்பீட்டில் ஒலிம்பியாட் போட்டியில் அறிமுகமாகி விளையாடி வருகிறார் சிகப்பியின் மகன் தண்ணீர்மலை.

மகிழ்ச்சி
தண்ணீர்மலைக்கு சிகப்பிதான் பயிற்சி கொடுத்து வருகிறார். பல்வேறு காரணங்களால் ஹாங்காங் சார்பாக சில வீரர்கள் விளையாட முடியாமல் போனதால் தற்போது சிகப்பி மற்றும் தண்ணீர்மலை ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றனர். இவர்கள் ஹாங்காங் செஸ் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ளதால் இந்த வாய்ப்பு அவர்களுக்கு சாத்தியமாகியுள்ளது. எனவே எதிர் வரும் போட்டிகளில் ஏதோ ஒரு வீரர் இந்திய உடையணிந்து தமிழ் மொழியில் பேசினால் அவர் இந்தியாவுக்காக விளையாடுகிறார் என நினைத்துக்கொள்ளாதீர்கள் மக்களே. எப்படியாயினும் விளையாட்டுக்கு எல்லை கோடுகள் கிடையாதுதானே?
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications