குக்கிராமத்து பாட்டியும் கருவாட்டு குழம்பும்.. நெகிழ்ந்து நினைவு கூர்ந்த எம்ஜிஆர்
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நாளில் அவரை பற்றின ஒரு நினைவு துளி இதோ:
4.7.1977 = மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற நாள். அன்றைய தினம் ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் எம்ஜிஆரை நேரில் காண அலைமோதுகிறார்கள்.
நாகர்கோவிலைச் சேர்ந்த எம்ஜிஆர் அபிமானிகள் தனி பேருந்தில் புறப்பட்டு சென்னை வருகிறார்கள். ராமாவரம் தோட்ட வாசலில் பேருந்து நிற்கிறது. நாகர்கோவிலிலிருந்து இப்படி வந்திருக்கிறார்கள் என்ற தகவல் எம்ஜிஆரிடம் தெரிவிக்கப்பட்டது.

நல்லா இருக்காங்களா?
உடனடியாக வந்திருந்த அனைவருக்கும் சூடான இட்லியும் கருவாட்டுக் குழம்பும் பறிமாறப்பட்டது. அதற்கு பிறகு வந்திருந்தவர்களிடம் பேச தொடங்கினார் எம்ஜிஆர். அப்போது வயதான பெரியவர் ஒருவரிடம், நாகர்கோவிலுக்கு 3 மைல் தூரத்துக்கு முன்னால் உள்ள ஒரு குக்கிராமத்தின் பெயரை சொல்லி, அந்த கிராமத்திலிருந்து ஒரு பெண்மணியின் பெயரையும் குறிப்பிட்டு "அந்த அம்மா நல்லா இருக்காங்களா" என்று விசாரிக்கிறார்.

எப்படி தெரியும்?
அதைக் கேட்டதும் அந்த பெரியவர், "ஏதோ இருக்காங்க... ஆனா ரொம்ப வயசாயிடுச்சு... உடம்பு தளர்ந்து போய் கவனிப்பு இல்லாம இருக்காங்க" என்று கவலையுடன் சொன்னார். பிறகு எம்ஜிஆரிடம், "ஆமா.. அந்த அம்மாவை எப்படி உங்களுக்கு தெரியும்?" என்று ஆச்சரியப்பட்டு கேட்டாராம்.

குடிசையில் தங்கினோம்
அதற்கு எம்ஜிஆர், "30 வருஷத்துக்கு முன்னாடி அந்த கிராமத்து வழியா நான் கார்ல போனேன். அப்போ கார் ரிப்பேர் ஆகிப்போச்சு. ராத்திரி 12 மணிக்கு ரிப்பேர் செய்ய அந்த கிராமத்துல யாருமில்லை. அதனால அந்த அந்த அம்மாவோட குடிசையில்தான் ராத்திரி முழுவதும் நானும் என் நண்பனும் தங்கியிருந்தோம்.

கருவாட்டு குழம்பு
அது மட்டுமல்ல, அந்த ராத்திரியில தண்ணி ஊத்தி வைச்ச பழைய சோத்துக்கு சாலக் கருவாட்டை சுட்டு, பசிக்கு சோறு கொடுத்தாங்க, அன்னிக்கு என் பசிக்கு சோறு போட்ட தாயா இன்னிக்கு இந்த நிலைமையில் இருக்காங்க? என்று வருத்தப்பட்டாராம் எம்ஜிஆர்!
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications