குக்கிராமத்து பாட்டியும் கருவாட்டு குழம்பும்.. நெகிழ்ந்து நினைவு கூர்ந்த எம்ஜிஆர்
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நாளில் அவரை பற்றின ஒரு நினைவு துளி இதோ:
4.7.1977 = மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற நாள். அன்றைய தினம் ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் எம்ஜிஆரை நேரில் காண அலைமோதுகிறார்கள்.
நாகர்கோவிலைச் சேர்ந்த எம்ஜிஆர் அபிமானிகள் தனி பேருந்தில் புறப்பட்டு சென்னை வருகிறார்கள். ராமாவரம் தோட்ட வாசலில் பேருந்து நிற்கிறது. நாகர்கோவிலிலிருந்து இப்படி வந்திருக்கிறார்கள் என்ற தகவல் எம்ஜிஆரிடம் தெரிவிக்கப்பட்டது.

நல்லா இருக்காங்களா?
உடனடியாக வந்திருந்த அனைவருக்கும் சூடான இட்லியும் கருவாட்டுக் குழம்பும் பறிமாறப்பட்டது. அதற்கு பிறகு வந்திருந்தவர்களிடம் பேச தொடங்கினார் எம்ஜிஆர். அப்போது வயதான பெரியவர் ஒருவரிடம், நாகர்கோவிலுக்கு 3 மைல் தூரத்துக்கு முன்னால் உள்ள ஒரு குக்கிராமத்தின் பெயரை சொல்லி, அந்த கிராமத்திலிருந்து ஒரு பெண்மணியின் பெயரையும் குறிப்பிட்டு "அந்த அம்மா நல்லா இருக்காங்களா" என்று விசாரிக்கிறார்.

எப்படி தெரியும்?
அதைக் கேட்டதும் அந்த பெரியவர், "ஏதோ இருக்காங்க... ஆனா ரொம்ப வயசாயிடுச்சு... உடம்பு தளர்ந்து போய் கவனிப்பு இல்லாம இருக்காங்க" என்று கவலையுடன் சொன்னார். பிறகு எம்ஜிஆரிடம், "ஆமா.. அந்த அம்மாவை எப்படி உங்களுக்கு தெரியும்?" என்று ஆச்சரியப்பட்டு கேட்டாராம்.

குடிசையில் தங்கினோம்
அதற்கு எம்ஜிஆர், "30 வருஷத்துக்கு முன்னாடி அந்த கிராமத்து வழியா நான் கார்ல போனேன். அப்போ கார் ரிப்பேர் ஆகிப்போச்சு. ராத்திரி 12 மணிக்கு ரிப்பேர் செய்ய அந்த கிராமத்துல யாருமில்லை. அதனால அந்த அந்த அம்மாவோட குடிசையில்தான் ராத்திரி முழுவதும் நானும் என் நண்பனும் தங்கியிருந்தோம்.

கருவாட்டு குழம்பு
அது மட்டுமல்ல, அந்த ராத்திரியில தண்ணி ஊத்தி வைச்ச பழைய சோத்துக்கு சாலக் கருவாட்டை சுட்டு, பசிக்கு சோறு கொடுத்தாங்க, அன்னிக்கு என் பசிக்கு சோறு போட்ட தாயா இன்னிக்கு இந்த நிலைமையில் இருக்காங்க? என்று வருத்தப்பட்டாராம் எம்ஜிஆர்!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications