தர்பார் சும்மா கிழி போல்.. லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி.. இந்த பாட்டையும் காப்பியடித்தாரா அனிருத்?
Recommended Video
சென்னை: தர்பார் சிங்கிள் டிராக் போல் மாஸ்டர் படத்தில் லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி என தொடங்கும் பாடலையும் அனிருத் காப்பி அடித்துவிட்டதாக சமூகவலைதளங்களில் வைரலாகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படம் வருவதற்கு முன்பே பிரபலமடைந்துவிட்டது. பிகில் பட வசூல் தொடர்பாக நெய்வேலியில் நடந்த இந்த படப்பிடிப்பிலிருந்து இளைய தளபதி, அதிகாரிகளால் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்த நிலையில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்.

ஆடம்பரம்
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் முதல் சிங்கிள் டிராக் கடந்த 14-ஆம் தேதி வெளியானது. இது தொடர்பாக சோனி நிறுவனம் வெளியிட்ட போஸ்டரில் ஆட்டம் ஆரம்பரம் என்றும் ஒரு குட்டி கதை வெய்ட்டிங் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி என தொடங்கும் பாடல் வெளியானது.

பாடல்
ஏராளமான ஆங்கில வார்த்தைகளுடன் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை பாடியவர் நடிகர் விஜய். பிகில் படத்திலும் வெறித்தனம் பாடலை பாடி ஹிட்டாக்கியுள்ளார். இந்த நிலையில் இந்த பாடலையும் அனிருத் காப்பி அடித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த பாடலின் ஆதி அந்தத்தையும் ஹேட்டர்கள் கண்டுபிடித்து பரப்பி வருகின்றனர்.

காப்பி
இந்த பாடல் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான ராஜகாளியம்மன் திரைப்படத்தில் வரும் "சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன்" என தொடங்கும் பாடலை போல் உள்ளதாக பகிர்ந்து வருகின்றனர். இந்த பாடலை வடிவேல் பாடியிருந்தார். தர்பாரை போல் இந்த பாடலையும் அனிருத் காப்பி அடித்துவிட்டாரா என சோஷியல் மீடியாக்கள் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன.
— Lone wolf (@mrtnrx) February 16, 2020 |
சும்மா கிழி பாடல்
தர்பார் படத்தின் சும்மா கிழி பாடலும் இது போல் காப்பி அடிக்கப்பட்டதாகவே அந்த பாடல் டிராக் வெளியான போது கூறப்பட்டது. அந்த பாடல் தண்ணீ குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தால் பாடலையும் ஐயப்ப பாடலான கட்டோடு கட்டு முடி பாடலையும் சாயலாக கொண்டிருந்தது என கூறப்பட்டது. இந்த பாடலை எஸ் பி பாலசுப்பிரமணியன் பாடியுள்ளார். இசைக்கு எல்லையே இல்லை என்பதால் எல்லாமே காப்பி அடித்தது என நம்மால் சொல்ல முடியாது. பலரது உழைப்பில் பாடல்கள் உருவாகின்றன என்றும் சிலர் ஆதரவாக வாதம் செய்கின்றனர்.












Click it and Unblock the Notifications