12 நாட்கள் மாமல்லபுரத்தை விட்டு நகர மாட்டேன்! முதலமைச்சரை மனம் குளிர வைத்த அமைச்சர் மெய்யநாதன்!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் மாமல்லபுரத்தை விட்டு அடுத்த 12 நாட்களுக்கு நகர மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்.
Recommended Video
செஸ் போட்டி நடைபெற்று வரும் இடத்தில் ஒரு சிறிய குறையோ புகாரோ கூட வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக அவர் செயலாற்றி வருகிறார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரம்மாண்டத்திற்கு பின்னணியில் உதயநிதி ஸ்டாலினின் கடுமையான உழைப்பு இருப்பதாக பார்ப்பவர்களிடம் எல்லாம் பெருமிதம் தெரிவித்து வருகிறார் அமைச்சர் மெய்யநாதன்.

செஸ் ஒலிம்பியாட்
இந்திய வரலாற்றில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்பதற்காக 186 நாடுகளில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வந்துள்ளனர். இவர்களுக்கான வரவேற்பு முதல் வழியனுப்புவது வரை தமிழக அரசே அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றிருக்கிறது. இதனிடையே நேற்று முன் தினம் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா உலகம் முழுவதும் பார்வையாளர்களை கவர்ந்தது.

போட்டிகள் தொடங்கின
இந்நிலையில் நாள்தோறும் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறும் நிலையில், அடுத்த 12 நாட்களுக்கும் மாமல்லபுரத்தை விட்டு நகர மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் அமைச்சர் மெய்யநாதன். வீரர்களுக்கு தேவையான வசதிகள் முதல் இன்னும் பல விவகாரங்களை நேரடியாக பார்த்து பார்த்து அங்கு முகாமிட்டு செயல்படுத்தி வருகிறார் அமைச்சர் மெய்யநாதன்.

முதல்வர் பாராட்டு
அமைச்சர் மெய்யநாதனின் ஒவ்வொரு நடவடிக்கையும் முதலமைச்சர் ஸ்டாலினின் மனம் குளிரும்படியாக இருப்பது கவனிக்கத்தக்கது. முதல்முறை அமைச்சராக இருக்கும் ஒருவர் சீனியர் அமைச்சர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் செயலாற்றுவதை எண்ணி ஸ்டாலின் பெருமைப்பட்டிருக்கிறார். இதனிடையே அமைச்சரவையில் மெய்யநாதனை சேர்க்கும் போது ஆரம்பத்தில் அவரது செயல்பாடுகள் மீது தனக்கு ஒரு சந்தேகம் இருந்ததாக அண்மையில் நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உட்கட்சி பிரச்சனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரத்தெட்டு உட்கட்சி பிரச்சனைகளும், பஞ்சாயத்துக்களும் இருக்கின்ற போதும் அதற்கெல்லாம் இது நேரமில்லை என முழுமையாக அந்த வேலைகளை தள்ளி வைத்திருக்கிறார் அமைச்சர் மெய்யநாதன். எதுவாக இருந்தாலும் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு பிறகு பார்த்துக்கொள்வோம் எனக் கூறி தன்னை சந்திக்க வருவதாக கூறிய புதுக்கோட்டை மாவட்ட கட்சிக்காரர்களுக்கும் தடை போட்டுவிட்டார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications