அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ தேசிய கருத்தரங்கம்.. தமிழக எம்பிக்கள் பங்கேற்பு
சென்னை: யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மகத்துவத்தை அறியும் தேசிய கருத்தரங்கம் நாமக்கல்லில் நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை பட்டதாரிகள் மற்றும் மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்கில் எம்பிக்கள் ராஜேஷ் குமார் மற்றும் சின்ராஜ், சுற்றுலா அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இவர்களுடன் இந்திய சுற்றுலா கழகத்தின் அதிகாரி மோனிகா பிரகாஷ் கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கில் 3000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அறிவியல் சார்ந்த கருத்தரங்கள் நடந்தன. யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலம் எப்படி எல்லாம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மருத்துவர்களும் தங்களுடைய அனுபவங்கள் பகிர்ந்து கொண்டனர்.

இயற்கை மருத்துவத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் வாழ்வியலை எப்படியெல்லாம் மேன்மைப்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து கருத்தரங்கில் சொல்லப்பட்டது. எந்த மாதிரியான நோய்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படலாம் என்பது குறித்து பேசப்பட்டது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் மாணவர்கள் அறிவியல் பூர்வமான சில விஷயங்களை கற்றுக் கொண்டனர்.
பொதுமக்களுக்கு யோகா பயிற்சிகளும் செய்து காண்பிக்கப்பட்டன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை மூலிகை பானங்கள் கொடுக்கப்பட்டன. கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications