"நோ டேட்டா.." நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்கள் விவரம் இல்லை.. கை விரித்த தேசிய தேர்வு முகமை
சென்னை: ‛‛நீட் தேர்வு தொடர்பாக கிராமப்புற மாணவர்கள் பற்றிய விபரங்கள் எங்களிடம் இல்லை'' என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய தேர்வு முகமை பதிலளித்துள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேசிய அளவில் பொது மருத்துவம், பல்மருத்துவம் பயில நீட் (NEET) தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதலில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. தற்போது தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது.
இந்த தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டுகள் உள்ளன.

7.5 சதவீத உள்ஒதுக்கீடு
இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதையடுத்து அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என திமுக அரசு வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் தீர்மானம்
இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர் திருப்பி அனுப்பினார். இது பெரும் விவாத பொருளானதோடு, தமிழக அரசும், கவர்னருக்கும் இடையே கருத்து மோதல் உருவாகும் நிலைய ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் நீட் விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது கிடப்பில் உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினும், கவர்னர் ரவியை சந்தித்து பேசி இருக்கிறார்.

ஆர்டிஐயில் கேள்வி
இந்நிலையில் தான் தேசிய தேர்வு முகமையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, நீட் தேர்வு அறிமுகம் ஆனதில் இருந்து சில மாநிலங்கள் குறிப்பாக தமிழகம் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைப்பது இல்லை என குற்றம்சாட்டப்பட்டு கூறப்படுகிறது. இதனால் நீட் தேர்வு தொடர்பாக மாநிலம் வாரியாக கிராமப்புற மாணவர்களின் விபரம் உள்ளதா?. இருந்தால் அதுதொடர்பான தகவல்களை தாருங்கள்'' என தேசிய தேர்வு முகமையிடம் கேட்கப்பட்டது.

விபரங்கள் இல்லை
இதற்கு தேசிய தேர்வு முகமை பதிலளித்துள்ளது. அதில், ‛‛நீங்கள் கேட்கும் விபரங்கள் எங்களிடம் இல்லை. இதனால் முழுவிபரங்களை அளிக்க முடியவில்லை'' என கூறப்பட்டுள்ளது. இந்த பதிலால் நீட் நுழைவுத்தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் விபரங்கள் இல்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேசிய தேர்வு முகமையிடம் இதுபோன்ற விபரங்கள் இல்லாமல் இருக்க வாய்ப்பு கிடையாது. நீட் நுழைவுதேர்வில் கிராமப்புற மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டால் அது கூடுதல் பிரச்சனையை ஏற்படுத்தலாம் எனவும், இதனால் தங்களிடம் விபரங்கள் இல்லை என தேசிய தேர்வு முகமை கூறியுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இன்னொரு கேள்வி
மேலும், இன்னொரு கேள்வியும் தேசிய தேர்வு முகமையிடம் கேட்கப்பட்டு உள்ளது. அதில் ‛இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரேமாதிரியான பாடத்திட்டங்கள் இல்லை. மாணவர்கள் வெவ்வேறு பாடத்திட்டங்களை படித்து வரும் சூழலில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது' என கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

13 மொழிகளில் கேள்வித்தாள்
இதற்கு தேசிய தேர்வு முகமை சார்பில், ‛‛நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் மத்திய, மாநில அரசுகளின் பாடத்திட்டங்களின் அடிப்படையில் தான் தயாரிக்கப்படுகிறது. மாநில பாடத்திட்டம் சார்ந்த உதவிகளுக்கு நிபுணர்கள் உள்ளனர். மேலும் மாநில அரசு பாடத்திட்டம், கிராமப்புற மாணவர்கள் எளிதில் கேள்விகளை புரிந்து கொள்ளும் வகையில் 13 மொழிகளில் கேள்வித்தாள் தயாரிக்கப்படுகிறது'' என கூறப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications