சட்டசபையில் வாய்திறந்த அதிமுக எம்எல்ஏ! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! இதுகூட தெரியாமலா இருக்கீங்க?
சென்னை : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை புதுப்பித்து தரவேண்டுமென நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தேன்மொழி சட்டசபையில் கேள்வி எழுப்பி நிலையில், அது கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது என்பதோடு, அதனை மீண்டும் கட்டித்தருவதாக அமைச்சரும் பதிலளித்தது சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக பகிரப்பட்டு வருகிறது
Recommended Video
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த தேன்மொழி சேகர்.
மூன்று முறை நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்தும் தொகுதிக்கு எதுவும் வெகுசிறப்பாக செய்யவில்லை என அப்பகுதி மக்கள் கூறினாலும், உள்ளூர் அரசியல் செல்வாக்கால் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருக்கிறார்.

தேன்மொழி எம்எல்ஏ
இந்நிலையில் பல மாதங்களாக சட்டசபையில் எதுவுமே பேசாத அவர்,தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் வாக்களித்த மக்களுக்கு ஏதாவது கேட்போம் என்று கேட்கப்போய் அது அவருக்கு வினையாக வந்துள்ளது. சட்டமன்ற கேள்வி நேரத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான தென்மொழி, வத்தலகுண்டு பேரூராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் மிகவும் பழுதடைந்து உள்ளது அதை இடித்துவிட்டு புதிய அலுவலகம் கட்டித்தர வேண்டும் என மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் வேண்டுகோள் விடுப்பதாக பேசினார்.

சமூக வலைதளங்களில் கிண்டல்
அவர் பேசிய வீடியோவை அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் பெருமையாக வாட்ஸ்அப்பில் உலவ விட்டனர். ஆனால் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை டெண்டர் விடப்பட்டு வத்தலகுண்டு கிராம நிர்வாக அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தற்போது கட்டிடமே கட்டி முடிக்கப்பட்டு விட்டது வருவாய்த் துறையினரும் கட்டடத்தை திண்டுக்கல் இருந்த முதலமைச்சர் திறந்து வைத்து விட்டார்.

கலாய்க்கும் திமுக
உண்மை நிலைமை இப்படி இருக்க அதிமுக எம்எல்ஏ ஏற்கனவே இருக்கும் புதிய கட்டிடத்தை மீண்டும், கட்டித் தாருங்கள் எனக் கேட்டது தற்போது வலைதளங்களில் நகைச்சுவை பொருளாக ஆகி உள்ளது. தொகுதிக்குள் என்ன நடக்கிறது என்ன திட்டங்கள் நடக்கிறது என்று கூட தெரியாமலா ஒரு எம்எல்ஏ இருப்பார் என்று , திமுக ஐடி விங் நிர்வாகிகள் இதை பெரிய அளவுக்கு சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

அமைச்சருக்கு பதில்
தனது வீட்டிலிருந்து சட்டமன்றத்திற்கும் சட்டமன்றத்தில் இருந்து வீட்டுக்கு மட்டுமே எம்எல்ஏ சென்று வருவதாகவும், வத்தலக்குண்டு அதிமுகவில் எம்எல்ஏவுக்கு எடுத்துச் சொல்ல யாரும் இல்லை போல என திமுகவினர் வருத்து எடுக்கின்றனர். இருப்பினும் சட்டமன்றத்தில் எம்எல்ஏ கேட்ட கேள்விக்கு பதிலளித்த வருவாய்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தமிழகத்தில் பாழடைந்து கிடக்கும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் புதுப்பிக்கப்படும் என்று சொன்னாரே, தவிர வத்தலகுண்டில் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்ட விவரம் அவருக்கும் தெரியவில்லை என்பதுதான் ஹைலைட்.
-
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications