நானென்ன கனவா கண்டேன்? சசிகலாவை சுற்றும் ஓபிஎஸ் அஸ்திரம்! குறிவைத்த ’ஜெ’ சர்ச்சை! சிக்கலில் இணைப்பு?
சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தீவிரமாக அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கி பயணிக்கும் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டு இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சசிகலாவுக்கு எதிராக வீசிய அஸ்திரமே தற்போது அவர்கள் இணைவதற்கு தடைக்கல்லாக இருப்பதாக கூறுகின்றனர் சசிகலா ஆதரவாளர்கள்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்திற்கு இடையே ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இணைந்து செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி நிற்கிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மாதிரியான நிகழ்வுகள் நடைபெறவில்லை.

சசிகலா - ஓபிஎஸ்
ஆனால் அது விரைவில் நடைபெறும் என உறுதியாக சொல்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். இதனால் சசிகலா தரப்பு, டிடிவி தினகரன் தரப்பில் இருந்த நிர்வாகிகளும், ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் தென் மண்டல நிர்வாகிகளும் உற்சாகத்தில் இருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டு இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சசிகலாவுக்கு எதிராக வீசிய அஸ்திரமே தற்போது அவர்கள் இணைவதற்கு தடைக்கல்லாக இருப்பதாக கூறுகின்றனர் சசிகலா ஆதரவாளர்கள்.

தர்மயுத்தம்
அது என்ன என விசாரித்தபோது தான் பல தகவல்கள் கிடைத்தன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தின் போது முதல்வர் பதவியை இழந்த ஓபிஎஸ் அப்போது தர்மயுத்தத்தை தொடங்கினார். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமென முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்தே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம்
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு காலமாக இந்த விசாரணை நடந்து வந்த நிலையில் பலமுறை ஆணையத்தின் விசாரணை காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போது விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் கடந்த 27ஆம் தேதி ஆணையத்தின் அறிக்கையை ஆணையத்தின் விசாரணை தலைவரான ஆறுமுகசாமி தமிழக அரசிடம் தாக்கல் செய்தார். அதில், சசிகலா,முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் இராம மோகன ராவ் உள்ளிட்டோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சந்திப்பில் சிக்கல்?
இதுகுறித்து சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, அதற்கான விவர அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இது ஓபிஎஸ்- சசிகலா சந்திப்புக்கு இடையூறாக இருக்கும் என்கின்றனர் விவரமறிந்த சசிகலா தரப்பினர். ஆனால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications