முதல்வரிடம் இருந்து பறந்த உத்தரவு.. சென்னையில் ரவுடிகளை ஒழிக்க ஆபரேஷன் DARE ரெடி.. செம பிளான்!
சென்னை: தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தான் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
Recommended Video
அந்த வகையில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்பட கூடாது என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மிகக் கடுமையாக உத்தரவிட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் வகையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல் தமிழ்நாடு டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதி ஓய்வு பெறுவதற்கு முன்னரே அடுத்த டிஜிபி குறித்தும், மக்களின் இடையூறு ஏற்படுத்தும் ரவுடிகளை அழிக்கும் வகையில் ஒரு திறமையான அதிகாரி வேண்டும் என்று அவர் நினைத்துள்ளார்.

முதல்வர் உத்தரவு
இந்த பின்னணியில்தான் நேர்மைக்கும், தனது கடமை தவறாத பணிக்கும் பெயர்போன சைலேந்திரபாபுவை டி.ஜி.பி.யாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்லது ரவுடிகளுக்கும் தலைநகராக விளங்கும் சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு, சென்னை புதிய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோருக்கு முதல்வரிடம் இருந்து உத்தரவு பறந்துஇந்த பின்னணியில்தான் நேர்மைக்கும், தனது கடமை தவறாத பணிக்கும் பெயர்போன சைலேந்திரபாபுவை டி.ஜி.பி.யாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்லது ரவுடிகளுக்கும் தலைநகராக விளங்கும் சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு, சென்னை புதிய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோருக்கு முதல்வரிடம் இருந்து உத்தரவு பறந்துள்ளது. ள்ளது.

ஆபரேஷன் DARE
சைலேந்திரபாபுவும் சரி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலும் சரி தாங்கள் பதவியேற்ற முதல் நாளிலேயே ரவுடிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தனர். சென்னையில் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்குவதற்காக புதிய ஆபரேஷன் திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளார் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால். இந்த ஆபரேஷனுக்கு DARE என்று பெயரிடப்பட்டுள்ளது.

2 வகைகளாக பிரிப்பு
இந்த ஆபரேஷன்படி ரவுடிகள் இரு வகைகளாக பிரிக்கப்படுவார்கள். அதாவது கடந்த 10 ஆண்டுகளாக ரவுடிகள் செய்த குற்றத்தின் அடிப்படையில் அவர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்படுவார்கள். மன்னிப்பு கேட்டு திருந்தி வாழும் ரவுடிகள், பொதுமக்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாத குறைவான குற்றச்செயல் செய்யும் ரவுடிகள் பி என்று வகைப்படுத்தப்படுவார்கள். பொதுமக்களை நேரடியாக தாக்குவது, மாமூல் வசூலிப்பது போன்ற குற்றச்செயல்கள் செய்யும் ரவுடிகள் ஏ பிரிவில் சேர்க்கப்படுவார்கள்.

முழுமையாக அழிப்பு
பொதுமக்களை அதிமாக அச்சுறுத்தும் ஏ பிரிவுகளில் உள்ள ரவுடிகள் முதலாவதாக DARE ஆபரேஷன் திட்டத்தின் கீழ் களையெடுக்கப்படுவார்கள். அடுத்ததாக பி பிரிவில் உள்ள ரவுடிகள் மீது நடவடிக்கை தொடங்கும். நிபந்தனை ஜாமினில் வெளிவந்து தலைமறைவாக சுமார் 39 ரவுடிகள் உள்ளனர் என்றும் அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். DARE ஆபரேஷன் மூலம் சென்னையில் ரவுடிகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள் என்று சங்கர் ஜிவால் நம்பிக்கை அளித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications