ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் கோடி திரட்டி தருகிறேன்... ப.சிதம்பரம் பாய்ச்சல்
சென்னை: கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு ஆகும் செலவு விவரங்களை தன்னிடம் தந்தால் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் கோடி திரட்டி தர முடியும் என தெரிவித்துள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
மேலும், நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியை பிடித்தம் செய்வது தவறனான நடவடிக்கை என்றும், இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறதா அல்லது அதிகாரிகள் ஆட்சி நடைபெறுகிறதா என ஆவேச கேள்வி எழுப்பியுள்ளார். செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நிவாரண நிதியை மத்திய அரசிடம் மாநில முதலமைச்சர்கள் அழுத்தம் திருத்தமாக கேட்டு பெற வேண்டும் என்றும், கடிதம் எழுதியதோடு அந்த கடமை முடிந்தது என எண்ணக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். நாடு இப்போது உள்ள இந்த இக்கட்டான பேரிடரில் புதிதாக மத்திய அரசு அலுவலகங்கள் அமைக்க இருபது ஆயிரம் கோடி நிதியை அதற்கு செலவிடுவது தவறு என்றும், இப்போது அந்த கட்டிடங்களுக்கு என்ன அவசரம் வந்தது என்றும் வினவியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் கடந்த 10 நாட்களாக மத்திய மாநில அரசுகளை எந்த ஒரு எதிர்க்கட்சியும் விமர்சனம் செய்யாமல் பொறுமைக்காத்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கவனித்து வந்தது. இந்நிலையில் அதில் திருப்தி ஏற்படாத காரணத்தால் எதிர்க்கட்சிகள் மத்திய மாநில அரசுகள் மீது விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன. தமிழக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்த நிலையில், ப.சிதம்பரம் தனது பங்கிற்கு மத்திய அரசு மீது பய்ச்சல் காட்டியுள்ளார்.
மேலும், ஊரடங்கு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுகளை வரவேற்றாலும் ஏழை எளியோருக்கு நிவாரண நிதியாக குறைந்தது ரூ.5,000 வழங்க வேண்டும் என்பது திமுக, காங்கிரஸ், மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளடங்கிய தமிழக கொரோனா விழிப்புணர்வு குழுவின் கோரிக்கையாக உள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications