பொறுத்தது போதும்.. பொங்கியெழும் முத்தரையர் சமூகம்.. திணறும் பட்டுக்கோட்டை
சென்னை: பட்டுக்கோட்டையில் இம்முறையும் தங்கள் சமூகத்தைச் சார்ந்தவருக்கு சீட் கொடுக்காததால், முத்தரையர்கள் சமூகம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டு. ஆங்காங்கே சில குளறுபடிகள் இருந்தாலும், 'வண்டிய விடு சின்ராசு' மோடில் பம்பரமாய் அடுத்தக் கட்ட பணிகளை துவங்கிவிட்டன.
இன்னும் வெகுசில காட்சிகள் மட்டும் வேட்பாளர்களை அறிவிக்க மீதமுள்ளன. இந்நிலையில், பட்டுக்கோட்டையில் நிலவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பல நாள் ஆதங்கத்தை இங்கு காணலாம்.

களம் இறங்கும் கட்டாயம்
தமிழகத்தில் ஓட்டு அரசியல் என்பது ஜாதியை மையப்படுத்தியே இன்று வரை சுழன்று வருகிறது. எந்த கட்சியாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் அந்தந்த சமூகங்களை குறி வைத்தே வேட்பாளர்கள் களம் இறக்கும் கட்டாயம் இங்கு உள்ளது. குறிப்பாக, டெல்டா பகுதிகளில் ஜாதி ரீதியிலான வேட்பாளர்களை களமிறக்கவில்லை எனில், கட்சிகளும் மிகவும் கஷ்டபட வேண்டியிருக்கும்.

வாய்ப்பு மறுப்பு
அந்த வகையில் பட்டுக்கோட்டை மிக முக்கியமான தொகுதி. இங்கு மிக முக்கிய சமூகமாக முத்தரையர்கள் உள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட சமூகம் இது. அதேபோல், வேளாளர், முக்குலத்தோர் சமூகத்தினர் உள்ளனர். முஸ்லீம், செட்டியார்கள் பரவலாக உள்ளனர். ஆனால், இங்கு முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மாற்று சமூகம்
திராவிட காட்சிகள் மாறி மாறி ஆண்டாலும், பட்டுக்கோட்டையைப் பொறுத்தவரை முத்தரையர் சமூகத்துக்கு தேர்தல் வாய்ப்பு இன்னமும் கிடைக்கவில்லை என்பது அவர்களது பல வருட ஆதங்கமாக உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலிலும், திமுக சார்பில் அங்கு நிறுத்தப்பட்டுள்ள அண்ணாதுரை வேளாளர் சமூங்கத்தைச் சேர்ந்தவர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸின் வேட்பாளர் என்.ஆர்.ரங்கராஜன் முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்தவர்.

சமூகநீதி கூட்டமைப்பு
இந்நிலையில், தேர்தல் நேரத்தில் தான் தங்கள் சமூக பலத்தை நிரூபிக்க முடியும் என்பதால், பட்டுக்கோட்டையில் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சமூகநீதி கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி களம் காணவிருக்கிறார்கள். இதற்காக வேட்பாளரையும் அறிவித்து, மற்ற கட்சிகளுக்கு கிலி ஏற்படுத்தியுள்ளனர்.
மாற்றத்தை ஏற்படுத்துவர்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications