லாக்டவுன் தளர்வு.. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. முதல்வர் பழனிசாமி கோரிக்கை..என்ன சொன்னார்?
இன்னும் சில நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லாக்டவுன் தளர்வுகள் காரணமாக மக்கள் கவனக்குறைவாக இருக்க கூடாது என்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.
சென்னை: இன்னும் சில நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லாக்டவுன் தளர்வுகள் காரணமாக மக்கள் கவனக்குறைவாக இருக்க கூடாது என்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழக முதல்வர் பழனிசாமி இன்று மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. இ பாஸ் மாவட்டங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் பழனிச்சாமி மருத்துவர் குழுவுடன் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மக்களுக்கு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

மக்கள் கட்டுப்பாடு
முதல்வர் தனது பேட்டியில், மக்கள் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் கொரோனா நோய் பரவலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

காலி இடங்கள்
தமிழகத்தில் மருத்துவ காலி பணியிடங்களை நிரப்ப ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் 2000 மினி -கிளினிக் அமைக்கப்படும். கிராம மக்கள் மருத்துவ வசதி பெறும் வகையில் மினி கிளினிக் அமைக்கப்படும். மக்களுக்கு எளிமையான முறையில் மருத்துவ வசதி சென்று சேர ஏற்பாடுகள் செய்யப்படும். எல்லோரும் மருத்துவ வசதியை அச்சமின்றி, தடங்கல் இன்றி பெறுவதே எங்கள் நோக்கம்.

எங்கள் நோக்கம்
தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகள் எப்போதும் போல இருக்கும்.கட்டுப்பாட்டு பகுதிகளை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் மக்கள் வெளியே செல்ல கூடாது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 85,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகம்தான் கொரோனா சோதனையில் முதலிடத்தில் உள்ளது .

மக்கள் எச்சரிக்கை
இன்னும் சில நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லாக்டவுன் தளர்வுகள் காரணமாக மக்கள் கவனமின்றி இருக்க கூடாது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளி விடுவது அவசியம். எல்லோரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். தமிழகத்தில் ஒரு உயிர் பிரிய கூட அரசு அனுமதிக்காது.எல்லா உயிரும் அரசுக்கு முக்கியம்.

உயிர் முக்கியம்
எங்களுக்கு பொருளாதாரம் முக்கியம் இல்லை. நிதி முக்கியம் இல்லை. உயிர்தான் முக்கியம். அதனால்தான் மருத்துவர் குழுவுடன் ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்கிறோம். தமிழகத்தில் குறைவான இறப்பு சதவிகிதம் உள்ளது. தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மக்களிடம் கேட்பது ஒன்றுதான், அரசு கேட்கும் அறிவுரையை கேளுங்கள், என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார் .
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications