டாஸ்மாக்குக்கு செஞ்சது போல.. பக்காவான ஏற்பாடுகள்.. காய்கறி விற்பனைக்கும் அவசரமாக தேவை!
சென்னை: கொரோனா அதிகவேகமாக பரவுவதற்கு காரணமாக இருந்ததால் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. இதனையடுத்து காய்கறி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தற்போது டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு செய்தது போல சென்னையில் காய்கறி விற்பனைக்கும் முழுவீச்சில் அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தை முழு வீச்சில் இயங்கியது. இதனால் லாக்டவுனால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்ட போதும் விவசாயிகள் ஓரளவு தப்பி இருந்தனர்.
கிடைத்த வாகனங்களை பயன்படுத்தி கோயம்பேடுக்கு காய்கறி, பூக்கள், பழங்களை விவசாயிகள் அனுப்பி வைத்தனர். இதனால் கோயம்பேடு காய்கறி சந்தை மட்டும் லாக்டவுன் காலத்திலும் களைகட்டியது. கோயம்பேடு சந்தை திறந்து இருந்ததால் பொதுமக்களுக்கும் வழக்கமான விலையில் காய்கறிகள் கிடைத்து வந்தன. லாக்டவுன் காலத்தில் இது மிகப் பெரும் உதவியாகவும் இருந்து வந்தது.

மூடப்பட்ட கோயம்பேடு
ஆனால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்து சென்றவர்கள், பணிபுரிந்தவர்கள் என பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் கொரோனா பரப்பும் இடமாக கோயம்பேடு சந்தை இருப்பது தெரியவந்தது. இதனால் கோயம்பேடு சந்தையை மூட வேண்டிய நெருக்கடி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. தற்போது திருமழிசையில் கோயம்பேடு வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்யலாம் என அரசு அறிவித்திருக்கிறது.

காய்கறி விலை உயர்வு
இது நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே காய்கறி விலைகள் விறுவிறுவென உயர்ந்துவிட்டன. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. லாக்டவுன் காலத்தில் வருவாய் இல்லாத சூழலில் காய்கறிகளும் ஒரு சுமையாக உருவெடுத்திருக்கிறது. இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு ஆறுதல் தந்த சூழ்நிலையும் இல்லாது போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

டாஸ்மாக் விற்பனைக்கு ஜரூர் ஏற்பாடுகள்
தற்போதைய நிலையில் திருமழிசையில் காய்கறி விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்து தரப்பட வேண்டும் என்பதுதான் வர்த்தகர்களின் உடனடி கோரிக்கை. டாஸ்மாக் மதுபான கடைகளைத் திறக்க போர்க்கால அடிப்ப்டையில் தடுப்புகள் அமைப்பு, சமூக இடைவெளிக்கான ஒழுங்குகளை செய்வது, உரிய பாதுகாப்பு தருவது என முழுமையாக அரசு தரப்பு செயல்பட்டது. இதனால் டாஸ்மாக் நேற்று திறக்கப்பட்ட போது எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை.

கோயம்பேடு ஆகுமா திருமழிசை?
இதேபாணியில் திருமழிசையில் இன்னொரு தற்காலிக கோயம்பேடு சந்தைய அரசால் உருவாக்க முடியும். இது சாத்தியமானதுதான். இப்படி திருமழிசை காய்கறி சந்தையை உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் அரசு செய்து கொடுத்தால்தான் உயர்ந்திருக்கும் காய்கறி விலையும் குறையும். திருமழிசை சந்தை முழுமையாக செயல்பட்டால் கோயம்பேடு சந்தைய நம்பி இருந்த விவசாயிகளின் வாழ்விலும் ஆறுதல் கிடைக்கும்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications