பிரதமர் கேர்ஸ் நிதி.. அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பும் ப.சிதம்பரம்.. பதில் சொல்வது யார் என கேள்வி
சென்னை: பிரதமர் கேர்ஸ் நிதி தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார் ப.சிதம்பரம்.
பொது நலன் வழக்குக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்று நிவாரணத்திற்கான பிஎம் கேர்ஸ் நிதியின் பணத்தை என்.டி.ஆர்.எஃப்-க்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
பிஎம் கேர்ஸ் நிதியில் இதுவரை சேர்ந்துள்ள பணம் குறித்த தகவல்களை வெளியிடுவதை மத்திய அரசு தவிர்த்து வருகிறது என்றும் மனுவில் கூறப்பட்டது.

ஆனால், மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், பிஎம் கேர்ஸ் நிதியின் பணத்தை என்.டி.ஆர்.எஃப்க்கு மாற்ற உத்தரவிட முடியாது என்று கூறியது.
இருப்பினும், காங்கிரஸ் கட்சி, இந்த நிதி விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.
இது தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம் ஒரு ட்வீட்டில் கூறியதாவது: "PMCares நிதியத்தின் சட்டப் பொறுப்பு குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பு இறுதியானதுதான். அதில் மாற்றமில்லை. ஆனால் கல்வியாளர்கள் வட்டத்தில் இது நீண்டகாலம் பேசப்படும். பிரதமர் நிதியில் வெளிப்படைத்தன்மை, நிதி மேலாண்மை உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இது பற்றி உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவிக்கவில்லை.

2020 மார்ச் மாதத்தில் முதல் ஐந்து நாட்களில் ரூ .3076 கோடியை வழங்கிய நன்கொடையாளர்கள் யார்? அவை சீன நிறுவனங்களை உள்ளடக்கியதா? ஏப்ரல் 1ம் தேதி முதல் பெறப்பட்ட தொகை என்ன, நன்கொடையாளர்கள் யார்? பல்வேறு கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியிலிருந்து பணத்தை ஒதுக்கீடு செய்வதற்கான நடைமுறை என்ன? நிதியத்தின் தொடக்கத்திலிருந்து பணம் பெறுபவர்கள் யார்? நிதியை பெறுவோரிடம் சான்றிதழ் கோரப்பட்டு பெறப்படுகின்றனவா? இந்த நிதி தகவல் அறியும் உரிமைக்கு அப்பாற்பட்டது என்றால், இந்த முக்கியமான கேள்விகளுக்கு யார் பதிலளிப்பார்கள்? இவ்வாறு ப.சிதம்பரம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ், கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், அரசு வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்திற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அரசு என்பது மக்களின் சேவகன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications