நடிகர் சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. வசமாக சிக்கிய இளைஞர்.. திடீர் பரபரப்பு!
சென்னை: நடிகர் சரத்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை காவல் கட்டுப்பாடு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய ஒரு நபர் 'நடிகர் சரத்குமாரின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வெடித்து விடும்'' என்று கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

வெடிகுண்டு மிரட்டல்
மர்ம நபர் கூறியதால் அதிர்ச்சி அடைந்த போலீசார், கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். மோப்ப நாய் உதவியுடன் வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர். வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதனால் இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதன்பின்னர் சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை போலீசார் ஆராய்ந்து பார்த்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்
விசாரணையில் அழைப்பு வந்த செல்போன் எண் விழுப்புரம் மாவட்டம், கூனிமேடு பகுதியை சேர்ந்த மணிபாலன் என்பவருடையது என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நீலாங்கரை உதவி ஆய்வாளர் பிரபு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த புவனேஷ்(20) என்ற நபர்தான் செல்போனை எடுத்து மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. விசாரணையில் புவனேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

வாடிக்கையாக வைத்திருக்கிறார்
புவனேஷை கைது செய்த போலீசார், அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதால், ''இதுபோல் இனிமேல் செய்தால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறவினர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அவரை விடுவித்தனர். புவனேஷ் இதேபோல் முக்கிய பிரமுகர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

போலீசார் எச்சரிக்கை
தமிழக முன்னாள் முதல்வர்கள், தற்போதைய முதல்வர், நடிகர்கள் விஜய், அஜித் முக்கிய பிரபலங்களுக்கு மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிகிறது. முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications