பூந்தமல்லி அருகே இடித்து தள்ளப்படும் கடைகள், வீடுகள்.. அதிரடியாக நடக்கும் பெரிய மாற்றம்
சென்னை: பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நடைபெற்று வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் பூந்தமல்லி அருகே கரையான்சாவடி, குமணன்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ தூணில் வாகனங்கள் செல்லும் பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பாலம் அமைக்கப்பட்டால் வாகனங்கள் எளிதாக சென்றுவர முடியும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நடைபெற்று வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளில், பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பட உள்ளது. அந்த பகுதி மக்களின் வசதிக்காக, மவுண்ட்- பூந்தமல்லி சாலை பகுதியில் உள்ள கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ தூண்களின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக மேற்கொள்ளப்படுகின்றன,

இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அப்பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளை நோட்டீஸ் அளித்து இடித்து அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் காட்டுப்பாக்கம் பகுதியில் இருந்து கல்லறை பஸ் நிறுத்தம் வரை மெட்ரோ தூண்களின் மீது வாகனங்கள் செல்லும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வாகனங்கள் கீழே செல்வதற்காக சர்வீஸ் சாலைகள் மற்றும் கால்வாய்களும் அமைக்கப்பட இருக்கின்றன. நிலம் கையகப்படுத்தும் பணிக்காக மட்டும் பெருநகர சென்னை வளர்ச்சி திட்டம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.150 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. மேம்பாலம் அமைப்பதற்காக மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதால், விரைவில் அந்த தடத்தில் பொதுமக்களுக்கான போக்குவரத்து தொடங்க போகிறது. அங்கு வாகன நெரிசலை குறைக்க மெட்ரோவில் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இது முடிந்தால் எளிதாக வாகன ஓட்டிகள் சென்றுவர முடியும்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications