சிபிஐ- யால் ஆபத்து.. மூலிகை பெட்ரோல் ஃபார்முலாவை ஒப்படைக்கிறேன்.. ராமர் பிள்ளை பகீர்
சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மகள் நிஷாவிடம் புதன்கிழமை மூலிகை பெட்ரோல் ஃபார்முலா அனைத்தையும் ஒப்படைக்க உள்ளேன் எனவும் அதற்குள் சிபிஐ நபர்களால் என் உயிருக்கு ஆபத்து எனவும் மூலிகை பெட்ரோல் உற்பத்தியாளர் ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.
Recommended Video
மூலிகை பெட்ரோல் ஃபார்முலா அனைத்தையும் தனியார் நிறுவனத்திடம் கொடுப்பதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது ராமர் பிள்ளை பேசுகையில் "நான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல் மீது குற்றச்சாட்டு வைத்து சிபிஐ போலீஸார் என்னை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

குற்றச்சாட்டு
ஆனால் என் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாமல் என்னிடம் சிபிஐ தோற்றுப் போனது. இதனால் என்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் என்னிடம் தருவதற்கான வாதங்கள் நீதிமன்றத்தில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

சிபிஐ
சிபிஐ என்னிடம் தோற்றுப் போனதால் சிபிஐயை சேர்ந்த இரண்டு நபர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. இது மட்டுமில்லாமல் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் விவாதம் முடிந்த பிறகு புதன்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மகள் நிஷாவிடம் என்னுடைய மூலிகை பெட்ரோல் ஃபார்முலா அனைத்தையும் ஊடகம் முன்னிலையில் தர இருக்கிறேன்.

பெட்ரோல் டீசல் விலை குறையும்
அதுமட்டுமில்லாமல் ஒரகடத்தில் உள்ள எனது தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சுமார் 40,000 லிட்டர் மூலிகை பெட்ரோலும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மூலப் பொருளையும் அவரிடம் ஒப்படைக்க உள்ளேன். இது பயன்பாட்டிற்கு வந்தால் டீசல் 18 பெட்ரோல் 14 ரூபாய் மக்களுக்கு சென்றடையும்.

லாபத்தில் 50: 50
வரும் வருவாயில் எனக்கு 50% அவருக்கு 50% சதவீதம் என அனைத்தும் கையெழுத்திட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் மூலிகை பெட்ரோல் தயாரித்த பிறகு வெளியேறும் எரிவாயுவை 200 ரூபாய் செலவு செய்தால் சமைக்கும் எரிவாயுவாக மாற்றலாம். ஆக இந்த மூலிகை பெட்ரோல் மற்றும் டீசலை வைத்து பல்வேறு வாகனங்களை சோதனை நடத்தியுள்ளோம் அனைத்தும் வெற்றி அடைந்துள்ளது என தெரிவித்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications