கொரோனா மருத்துவ கருவிகளுக்கான ஜிஎஸ்டி குழுவில் பிடிஆர் புறக்கணிப்பு- ரவிக்குமார் எம்.பி. கண்டனம்
சென்னை: கொரோனா மருத்துவ உபகரணங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்வது தொடர்பான அமைச்சர்கள் குழுவில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் 28-ந் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முன்வைத்த வாதங்கள், மாநில உரிமைகளை வலியுறுத்துவதாக இருந்தது.

பிடிஆர் முன்வைத்த கோரிக்கை
நாடு முழுவதும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கருத்துகள் ஆழ்ந்த விவாதப் பொருளாகி இருக்கிறது. மேலும் இந்த கூட்டத்தில், கொரோனா சிகிச்சை தொடர்பான அனைத்து கருவிகள், உபகரணங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி இருந்தார்.

மத்திய அரசு குழு
அவரது இந்த யோசனையை ஏற்று மத்திய அரசு 8 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளது. மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான இந்த குழுவில் குஜராத் துணை முதல்வர் நிதின்பாய் படேல், உ.பி. நிதி அமைச்சர் சுரேஷ் கன்னா, தெலுங்கானா நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ், ஒடிஷா நிதி அமைச்சர் நிரஞ்சன் புரி, கேரளா நிதி அமைச்சர் பாலசந்திரன், கோவா போக்குவரத்து துறை அமைச்சர் மெளவின் கொடின்ஹோ, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய அரசு குழுவில் பிடிஆர் இல்லை
ஆனால் கோரிக்கையை வலியுறுத்தி பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு இந்த குழுவில் இடம்தரப்படவில்லை. இதுவும் கடும் சர்ச்சையானது. மத்திய அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கைக்கு இந்திய தொழில்முனைவோர் கூட்டமைப்பு ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

மத்திய அரசுக்கு பரிந்துரை
இதனிடையே மத்திய அரசு அமைத்த அமைச்சர்கள் குழுவும் கொரோனா மருத்துவ உபகரணங்கள் மீதாஜ ஜி.எஸ்.டி. வரி தொடர்பான ஆய்வு அறிக்கையை திங்கள்கிழமையன்று தாக்கல் செய்துள்ளது. அதில், கொரோனா மருத்துவ உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 5% குறைக்கலாம் என இந்த குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மொத்தமாக ஜிஎஸ்டி வரியையே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

ரவிக்குமார் எம்பி கண்டனம்
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லோக்சபா எம்.பி. ரவிக்குமார் இதனை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். ரவிக்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில், தங்களுக்கு ஏற்ப பரிந்துரை அளிக்கவேண்டும் என்பதற்காகத்தான் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்த குழுவில் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்படவில்லை என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என எழுதியுள்ளார்.
-
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications