கொரோனா பாதித்த ஆண்களுக்கு விரைப்பு பிரச்சினை ஏற்பட 6 மடங்கு அதிக வாய்ப்பு.. தவிர்ப்பது எப்படி?
சென்னை: கொரோனா ஒவ்வொரு நபர்களையும் ஒவ்வொரு வழியில் பாதிக்கிறது. கொரோனா வைரஸ் ஏற்படுத்தக்கூடிய நீண்டகால சிக்கல்களை வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
ரத்தத்தை உறைய வைக்கும் என்பதால், மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக எச்சரித்த மருத்துவர்கள், ரத்தத்தை நன்கு ஓடச் செய்யும் மாத்திரைகளை கொரோனா நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில்தான், ரோம் டோர் வெர்கட்டா பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, கொரோனா பாதித்தவர்களுக்கு ஆணுறுப்பு விறைப்புத்தன்மை (ED) ஏற்படாமல் தொய்வடையும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், மற்றவர்களை விட ஆறு மடங்கு இவர்களுக்கு இந்த குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தாக்கிய ஆண்களுக்கு, விறைப்புத்தன்மை இன்மை ஏற்படுவதற்கான ஆபத்து 5.66 மடங்கு அதிகமாகும். இதனால் தாம்பத்தியத்தில் பிரச்சினை, குழந்தை பிறப்பு உள்ளிட்டவற்றில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், கொரோனா நோயாளிகள் குணமானதும், மருத்துவருடன் தொடர்பில் இருந்து சிகிச்சைகளை பெறுவது நல்லது.
ஆண்ட்ரோலாஜிகல் டெஸ்ட் எடுத்து, குறைபாடு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.












Click it and Unblock the Notifications