தமிழகத்தில் முடிவுக்கு வந்த அரையாண்டு விடுமுறை .. 6 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. டிச.24ம் தேதி முதல் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 23ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது.

6 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 9 நாட்களும், 1 முதல் 5 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 12 நாட்களும் விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
1 முதல் 5 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 5ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 1 முதல் 3 வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டம் நடைபெறவுள்ளதால் விடுமுறை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதர வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்திய தனியார் பள்ளிகள் மீது முதன்மை கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுத்து வந்தனர். தொடர்ந்து, விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பல்வேறு ஆசிரியர் சங்க அமைப்புகள் பள்ளிக்கல்வி ஆணையரிடம் வலியுறுத்தின.
இந்த நிலையில் அரையாண்டு விடுமுறை முடிந்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவ - மாணவியர் உற்சாகமாக பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ஜனவரி 5ம் தேதி முதல் 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்க உள்ளது.












Click it and Unblock the Notifications