பொங்கல் அன்று வங்கி தேர்வு.. தைப்பூச தினத்தில் ஆதார் சிறப்பு முகாம்? இதென்ன வேலை? - சீமான் ஆவேசம்!
ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாமை வேறு நாளுக்கு மாற்ற வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் இன்று (பிப்ரவரி 5) தைப்பூசம் என்பதால், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாமை வேறு நாளுக்கு மாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
சமீபத்தில் தமிழர் திருநாளான பொங்கல் அன்று ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு நடைபெற்றது. பொங்கலன்று தேர்வு நடத்த பல்வேறு அரசியல் கட்சிகளும், தேர்வர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், திட்டமிட்டபடி பொங்கலன்றே தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது தைப்பூசத்தன்று சிறப்பு முகாம்களை நடத்த சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாம்
தமிழ்நாட்டில் தைபூசத்தையொட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் சார்பாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வகையில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த முகாமை வேறொரு தினத்தில் மாற்ற வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

கலெக்டர்கள் அறிவிப்பு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சியர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முப்பாட்டன் முருகன் தைப்பூச திருவிழா
தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனின் தைப்பூச திருவிழா தமிழ்நாட்டில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் நிலையில், பெரும்பாலான பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொள்ள முடியாத நிலையே உள்ளது. ஏற்கனவே தமிழர்களின் தனிப்பெரும் தேசியத் திருவிழாவாம் தைப்பொங்கல் நாளன்று வங்கித் தேர்வினை வைத்து தமிழ் மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ள முடியாத நெருக்கடியான சூழலை உருவாக்கியது இந்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI).

தேதியை மாற்றுங்கள்
தற்போது, தேர்தல் ஆணையமும் அதுபோன்று ஒரு சூழலை அளித்து நெருக்கடி அளிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஆகவே, இந்த சிறப்பு முகாமை வேறு ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றி அறிவிக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம் என சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications