ஆளுநர் குறித்து அவதூறு பேச்சு.. திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சஸ்பெண்ட் - துரைமுருகன்
சென்னை: தமிழ்நாட்டு ஆளுநர் ஆர் என் ரவி குறித்து அவதூறாக பேசிய சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சிக்கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்டங்கள் வாரியாக அன்பழகன் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அமைச்சர்கள், திமுக பேச்சாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்று பேசி வருகின்றனர்.

ஆளுநர் குறித்து அவதூறு பேச்சு
அந்த வகையில் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளராக இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் ஆளுநர் ஆர்என் ரவி குறித்து அவதூறாகவும், கொச்சையாகவும் பேசினார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு ஆளுநர் மாளிகை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது
சிவாஜி கிருஷ்ண மூர்த்தி பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திமுக மேடையில் அநாகரீகமாக பேசினால் அது கண்டித்தக்கது என்றார். மேலும் மா சுப்பிரமணியன் பேசுகையில், "திமுக மேடையில் அநாகரீகமாக பேசினால் அது கண்டிக்கத்தக்கது. யாராக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் பேசுவதை திமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இதுபோன்ற செயல்பாடுகளை முதல்வர் ஆதரிக்க மட்டார்.

நிச்சயம் அவர் மீது நடவடிக்கை
திமுகவில் இருப்பவர்கள் யாரும் இதுபோன்ற அநாகரீக செயலை விரும்புவது இல்லை. நிச்சயம் அவர் மீது நடவடிக்கை எடுக்க தலைமைக் கழகத்திற்கு நானும் பரிந்துரைப்பேன். பேச்சாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்து பேச வேண்டும். யாரோ ஒரு பேச்சாளர் பேசியதற்கு ஆளுநர் மாளிகையே புகார் அளித்துள்ளது வியப்பாக உள்ளது. மற்ற கட்சிகளில் உள்ள பேச்சாளர்கள் 100 சதவீதம் பேர் அநாகரிகமாகத்தான் பேசுகின்றனர். அவர்கள் யாரையும் அந்தக் கட்சிகள் கண்டிப்பது கிடையாது.

கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
ஆளுநர் குறித்து பேசிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி என்ற பேச்சாளருக்கு இவ்வளவு விளம்பரம் தேவையா என தெரியவில்லை" என்று மா சுப்பிரமணியன் கூறியிருந்தார். சிவாஜி கிருஷ்ண மூர்த்தியின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில், திமுகவில் இருந்து தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

துரைமுருகன் அறிக்கை
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்! -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!












Click it and Unblock the Notifications