சென்னையில் கார் மோதி எஸ்.ஐ. உயிரிழப்பு... பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை..!
சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் காவல் உதவி ஆய்வாளர் மீது கார் மோதியதில் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரை சேர்ந்தவர் பிரசன்னா. தமிழக காவல்துறையில் தொழில்நுட்ப காவல் உதவி ஆய்வாளராக வண்டலூரில் பணியாற்றி வரும் இவர், நேற்றிரவு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அதி வேகத்தில் வந்த எஸ்.யூ.வி. ரக கார் ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் காவல் உதவி ஆய்வாளர் பிரச்சன்னா மீது மோதியது. அதில் நிலைகுலைந்து போன அவர், படுகாயங்களுடன் துடிதுடித்துள்ளார். இதையடுத்து போலீஸார் மற்றும் அப்பகுதி மக்கள் பிரச்சன்னாவை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் துரதிர்ஷடவசமாக சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்திய கார் உரிமையாளர் ராஜ்குமார் என்பவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் வடபழனியில் உள்ள தனது இல்லத்திலிருந்து அடையாறு நோக்கி சென்று கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கார் மோதி உயிரிழந்த விவகாரம் சென்னை காவல்துறையினர் மத்தியில் பேசு பொருளாக உள்ளது. இதனிடையே இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த டெக்னிக்கல் எஸ்.ஐ. பிரசன்னாவுக்கு 25 வயது மட்டுமே ஆகிறது. மிக இள வயதில் தனது திறமையை கொண்டு காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர், தனக்குள் எத்தனை ஆசைகளை கொண்டிருந்தார் எனத் தெரியவில்லை.
காவல் உதவி ஆய்வாளர் பிரச்சன்னாவின் உடற்கூராய்வு முடிந்து அவரது சொந்த ஊரான கோலியனுருக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எத்தனையோ வம்பு வழக்குகளில் தலையிட வேண்டிய சூழல் உள்ளது. அவ்வாறு அதில் தலையிடும் பட்சத்தில் அவர்களுக்கான எதிரிகளும் அதிகரிக்கத் தொடங்குவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications