16000 அடி உயரத்தில் ஒலித்த செந்தமிழ்.. இண்டிகோ விமானியின் அழகு அறிவிப்பு.. பின்னணியில் உருக்கமான கதை
சென்னை: சென்னையிலிருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தின் விமானி தமிழில் அறிவிப்பு வெளியிட்டது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
இரண்டு நாட்களுக்கு முன் இணையத்தில் வெளியான விமான வீடியோ ஒன்று பெரிய அளவில் வைரலானது. இண்டிகோ விமானம் ஒன்றில் விமானி தமிழில் அறிவிப்பு வெளியிடும் வீடியோ ஆகும் இது. மிகவும் தூய தமிழில் இண்டிகோ துணை விமானி பேசியது பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இவரின் விபரங்கள் வெளியாகிறது. இப்படி விமானத்தில் தமிழில் அறிவிப்பை வெளியிட்ட துணை விமானியின் பெயர் இண்டிகோ கேப்டன் பிரியா விக்னேஷ் என்பதாகும். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
கைமாறும் நிறுவனம்?.. டிக்டாக் செயலியில் நினைத்து பார்க்க முடியாத டிவிஸ்ட்.. பின்னணியில் அமெரிக்கா!
சொன்னது என்ன
சென்னை - மதுரை விமானத்தில் துணை விமானி கேப்டன் பிரியா விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பில், கேப்டன் அசோக் சார்பாக நான் பேசுகிறேன்.கடல் மட்டத்தில் இருந்து நாம் இப்போது 16,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறோம். திருச்சி நகரத்திற்கு மேலே நாம் இப்போது சென்று கொண்டு இருக்கிறோம். இன்னும் பத்து நிமிடத்தில் காவேரி ஆறு, காவேரி, கொள்ளிடம் மேலே நாம் பறக்க போகிறோம்.
எங்கே இருக்கிறோம்
காவிரி இரண்டாக பிரியும் காட்சியை மக்கள் விமானத்தில் இருந்து பார்க்க முடியும். நாம் இப்போது ஸ்ரீ ரங்கத்தை கடக்க உள்ளோம். இங்கிருந்து நாம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை பார்க்க முடியும். இந்த ஆறுகள் பிரியும் இடத்தில்தான் ஸ்ரீரங்கம் கோவில் அமைந்துள்ளது. அழகர் மலையையும், யானை மலையையும் இரண்டு பக்கமும் நாம் பார்க்க முடியும். இப்போது நாம் மதுரையில் தரையிறங்க உள்ளோம்.
திரும்பினார்
கொஞ்சம் கொஞ்சமாக வலது பக்கம் திரும்பி, உயரத்தை குறைத்துக் கொண்டே செல்வோம். வைகை ஆற்றில் இருக்கும் இரண்டு பாலங்களை நாம் பார்க்கலாம். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் உட்பட தமிழகத்தின் வரலாற்று சாதனைகளை நாம் பார்க்க முடியும். வாழ்க தமிழ், வாழ்க பாரதம் என்று அவர் தமிழில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அழகான குரல்
இவரின் குரல் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. அழகான தமிழில் உருக்கமாக இவர் பேசியதை பலரும் வரவேற்று இருக்கிறார்கள். இவர் பேசுவது ஆர்ஜெ இரவு நேரத்தில் பாடுவது போல இருக்கிறது என்று பலரும் பாராட்டி உள்ளனர். இவரின் குரலை பலரும் பாராட்டி உள்ளனர்.
என்ன கதை
இந்த நிலையில் கேப்டன் பிரியா விக்னேஷ் பின் இருக்கும் உருக்கமான கதை குறித்த விவரம் வெளியாகி உள்ளது. இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவரின் அம்மா ஆசிரியை. இவரின் அப்பாவோ சாலை ஓரத்தில் துணை கடை போட்டு வியாபாரம் செய்து இருக்கிறார். இவரின் அப்பா அப்போது திருவனந்தபுரத்தில் கடையில் பணியாற்றி வந்தார்.
உதவி பெற்று உள்ளார்
பிரியா விக்னேஷ் விமானியாக படிப்பதற்கே பல லட்சம் செலவு ஆகியுள்ளது. இதற்காக சில இடங்களில் உதவியும் பெற்று இருக்கிறார்கள். இவரின் கனவை நினைவாக்க வேண்டும் என்று இவரின் குடும்பம், உறவினர்கள் எல்லோரும் ஆதரவு அளித்துள்ளனர். எளிமையான குடும்பத்தில் பிறந்த பிரியா விக்னேஷ் கடுமையான உழைப்பு மூலம் விமானியாக உயர்ந்து இருக்கிறார்.
தங்கள் குடும்பம்
அதேபோல் தங்களை குடும்ப சொத்துக்கள், நிலங்கள் என அனைத்தையும் விற்று இவர் படித்து இருக்கிறார் . அனைத்தையும் விற்றுத்தான் பிரியா விக்னேஷ் விமானிக்கு படித்து சிபிஎல் லைசன்ஸ் வாங்கி இருக்கிறார். இப்போதும் கூட இவரின் குடும்பத்தினர் எல்லோரும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார்கள். இப்போதும் கூட இவர் மிகவும் எளிமையான நபராகவே குடும்பத்தை நடத்தி வருகிறார். பிரியா விக்னேஷ் தமிழ் மீது அளப்பரிய காதல் கொண்டவர்.
செம வரவேற்பு
இந்த நிலையில் பிரியா விக்னேஷ் தமிழில் அறிவிப்பு வெளியிட்டது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இவரின் அறிவிப்புக்கு தமிழக மக்கள் சிறப்பான ஆதரவு அளித்துள்ளனர். அட தமிழக மக்கள் மட்டுமின்றி இண்டிகோ விமான நிறுவனமும் இவருக்கு பெரிய அளவில் ஆதரவு அளித்துள்ளது . மக்கள் இதை அதிகம் விரும்புகிறார்கள். தொடர்ந்து இப்படியே பேசுங்கள் என்று அந்த நிறுவனம் பிரியா விக்னேஷுக்கு ஆதரவு அளித்துள்ளது.