எனக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை.. கார்த்தி சிதம்பரம்
சென்னை: மோடியுடன் ஒப்பிடும் போது, ராகுல் காந்தி நிகரான தலைவர் இல்லை என்று கூறியதாக கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம். கார்த்தி சிதம்பரம் அரசியலில் நுழைந்ததில் இருந்து பல்வேறு சிக்கல்களில் சிக்கியிருக்கிறார். இந்த நிலையில், செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய ஒரு கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. கார்த்தி சிதம்பரம் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிடும் போது, ராகுல் காந்தி நிகரான தலைவர் இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.

தனது கட்சியில் உள்ள ஒருவரையே குறைத்து மதிப்பிட்டு பேசியது காங்கிரஸ் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:- எனக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை. காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மேலிடத்திற்கே அதிகாரம் உள்ளது. என்னுடைய பேட்டியை முழுமையாக பார்த்தால் நான் என்ன பேசினேன் என்று தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications