Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பகவத் கீதை ஆன்மீகம் தேசப்பற்றை போதிக்கிறது..கீதை படித்தால் தனி மனித ஒழுக்கம் உயரும்.. ஆர்.என்.ரவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பகவத் கீதையை படிக்க, படிக்க நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பகவத் கீதையை மனப்பாடம் செய்ய எளிமையாக அழகாக இயற்றப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். பகவத் கீதையை படித்தால் தனி மனித ஒழுக்கம் அதிகரிக்கும். கீதை படிக்கும் போது நல்லொழுக்கம் கட்டுப்பாட்டினை பெறலாம். இதன் மூலம் எந்த ஒரு செயலையும் நேர்கொண்ட பார்வையுடன் இலக்கை நோக்கி செய்து முடிக்கலாம் என்றும் கீதை ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ரவி தெரிவித்தார்.

பகவத் கீதை கார்த்திகை மாதத்தில் வளர்பிறையில் 11 வது நாளில், சுக்லபட்ச ஏகாதசி நாளில் அருளப்பட்டது. ஆங்கில மாதத்தில் ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதம் கீதை ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் அவதரித்த தினத்தை நாம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். அதே போன்று இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட நாளை கீதா ஜெயந்தி என நாம் கொண்டாடுகிறோம்.

மகாபாரதத்தில் குருஷேத்திர போரின் போது பகவான் கிருஷ்ணர், அர்ஜூனனுக்கு உபதேசித்ததே பகவத் கீதை. இது கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி நாளில் அருளப்பட்டது. ஆங்கில மாதத்தில் ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதம் கீதா ஜெயந்தியை நாம் கொண்டாடுகிறோம். கீதா ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த நாளை மோட்ஷ ஜெயந்தி என்றும் சொல்கிறார்கள்.

பகவத் கீதை

பகவத் கீதை

மகா விஷ்ணு கிருஷ்ண அவதாரத்தில் விஷ்ணுவின் 9வது அவதாரம் ஆகும். கீதை 700 வாசகங்களைக் கொண்டதாகும். இது மகாபாரதத்தில் பீஷ்ம பர்வம் பகுதியில் குறிப்பிடப்படுகிறது. போர்க்களத்தில் உருவானது பகவத் கீதை. பகவத் கீதை உபதேசிக்கப்பட்டு 5159 ஆண்டுகள் ஆகி விட்டதாக சொல்லப்படுகிறது. பகவத் கீதை, மனிதகுலத்திற்கு இறைவனால் அருளப்பட்ட மிகப் பெரிய பரிசு. வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் மிக எளிமையாக முறையில், எந்த காலத்திலும் கடைபிடிக்கக் கூடிய வகையில் சொல்லப்பட்டது. அடிப்படை மதிப்பு, மனிதனின் கடமைகள், வாழ்க்கை முறை போன்றவற்றை விளக்குவதாக அர்ஜுனனின் கேள்விகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளித்திருப்பார்.

கீதா ஜெயந்தி

கீதா ஜெயந்தி

2022 ம் ஆண்டில் கீதா ஜெயந்தி, டிசம்பர் 3 ம் தேதி கொண்டாடப்பட்டது. ஏகாதசி திதியிலேயே கீதை உபதேசிக்கப்பட்டது. இந்த ஆண்டு டிசம்பர் 03 ம் தேதியன்று காலை 5.39 மணி துவங்கி, டிசம்பர் 04 ம் தேதி காலை 5.34 வரை ஏகாதசி திதி உள்ளது. இந்த நேரத்தை கணக்கிட்டு கோவில்களில் கீதா ஜெயந்தி கொண்டாட்டங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கீதா ஜெயந்தி நாளில் கிருஷ்ணரை வேண்டிக் கொண்டால் வாழ்வில் மேன்மையான இடத்தை பெற முடியும். ஆன்மிகத்தில் உயர்நிலையை அடைய நினைப்பவர்கள் இந்த நாளில் கீதையை படிக்க துவங்கலாம். இந்த நாளில் சிறப்பு பஜனைகள், பூஜைகள் நடத்தி, அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்குவது வழக்கம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற கீதை ஜெயந்தி விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி மற்றும் சட்டை அணிந்தபடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பகவத் கீதையை மனப்பாடம் செய்யும் வகையில் எளிமையாக அழகாக இயற்றப்பட்டுள்ளது. ஜி20 அமைப்பில் இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்துள்ள பெருமை என்றும், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் ஆளுநர் தெரிவித்தார். மக்களின் பங்களிப்பு அனைத்திலும் இருக்க வேண்டும். இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்தியாவின் பெருமை

இந்தியாவின் பெருமை

அமைதியான உலகத்திற்கு இந்தியா தான் தலைமை பண்பை வழங்கும். இந்தியாவில் வேகமாக வளரும் உலக பொருளாதாரம், வெல்லும். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வேகமாக முன்னேறும். இந்தியா தற்போது ஜி-20 அமைப்புக்கு தலைமையேற்றுள்ளது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்துள்ள பெருமை.

தனி மனித ஒழுக்கம் அதிகரிக்கும்

தனி மனித ஒழுக்கம் அதிகரிக்கும்


பகவத் கீதையை படிக்க, படிக்க நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பகவத் கீதையை மனப்பாடம் செய்ய எளிமையாக அழகாக இயற்றப்பட்டுள்ளது. பலர் ஈர்க்கப்படுகிறார்கள். எனது ஆரம்பப் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில், என்னை ஊக்குவித்து, நான் எதைப்பெற வேண்டும் என்று நானே அறிய எனக்கு உதவியது அதுதான் என்றார்.
பகவத் கீதையை படித்தால் தனி மனித ஒழுக்கம் அதிகரிக்கும். கீதை படிக்கும் போது நல்லொழுக்கம் கட்டுப்பாட்டினை பெறலாம். இதன் மூலம் எந்த ஒரு செயலையும் நேர்கொண்ட பார்வையுடன் இலக்கை நோக்கி செய்து முடிக்கலாம்.

பகவான் கிருஷ்ணர்

பகவான் கிருஷ்ணர்

போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு ஏற்பட்ட குழப்பத்தை போக்கியவர் பகவான் கிருஷ்ணன். நமது இலக்கு போரிட்டு வெற்றி பெற்று தேசத்தை ஜெயிக்க வேண்டும். அதனால் ஒரே சிந்தனையுடன் போரிட்டு வெற்றி பெற வேண்டும் என்று கூறியவர் பகவான்கிருஷ்ணன். கீதையை படித்தால் இயற்பியலை எளிதில் கற்கலாம் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+