தமிழகத்தில் இன்று மேலும் 5795 பேருக்கு கொரோனா.. 116 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5795 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழக கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னையில் புதிதாக 1186 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றில் இருந்து மேலும் 6384 பேர் குணமடைந்தனர்.

கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,123 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,384 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 2,96,171 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 53,155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 3,55,449 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில், இன்று பதிவாகியுள்ள பாதிப்பையும் சேர்த்து, இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,20,267 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications