தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையா? பொதுமக்களை திருப்பி அனுப்பும் மருத்துவமனைகள்!
சென்னை: தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு பற்றாக்குறை இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடடாரும் பொதுமக்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
Recommended Video
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா மீண்டும் 2-வது இடத்துக்கு போய்விட்டது. நாள்தோறும் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கொரோனா கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்குகள் என பல மாநிலங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடப்படுவதன் அவசியமும் வலியுறுத்தப்படுகிறது.

தடுப்பூசி இருப்புகள் இல்லை?
கொரோனா தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் தமிழக அரசும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. இருப்பினும் பல இடங்களில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் திருப்பி அனுப்பிவிடப்படுவதாக கூறப்படுகிறது.

கோவிஷீல்டு- கோவாக்சின்
அத்துடன் பொதுவாக கோவாக்சின் தடுப்பூசியைத்தான் பொதுமக்கள் போடுவதை விரும்புகின்றனர். கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டால் 2 நாட்களுக்காவது உடல் அசதியாக இருக்கிறது என்பதால் அதை யாரும் விரும்பவில்லை. ஆனால் சில மருத்துவமனைகளில் கோவிஷீல்டுதான் இருப்பு இருப்பதாகவும் அது மட்டுமே போட முடியும் என்றும் கூறுகின்றனராம்.

ஆட்சியருக்கு புகார்
இதனால் கோவிஷீல்டை வேறுவழியே இல்லாமல் பொதுமக்கள் போடுகிற நிலையும் ஏற்பட்டிருக்கிறது. கோவாக்சின் மட்டுமே போட முடியும் என்பவர்கள் மருத்துவமனைகளுக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கும் நிலைதான் நீடிக்கிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கும்பகோணம் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லை என மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தொகுதியில் பற்றாக்குறை?
அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியிலும் கூட கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக பாஜகவை எதிர்க்கும் மாநிலங்களுக்கு போதுமான தடுப்பூசியை மத்திய அரசு அனுப்புவது இல்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

விரைவான நடவடிக்கை தேவை
கொரோனா தடுப்பூசியில் அரசியல் செய்யக் கூடாது என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர். தற்போது தமிழகமும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இதற்கான உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள் ஆகும்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications