சரசவரவென குறையும் தினசரி கொரோனா.. இன்று வெறும் 480 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி
சென்னை: தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று மாநிலத்தில் வெறும் 480 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜன மாதம் கொரோனா 3ஆம் அலை உச்சம் தொட்ட நிலையில், அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஓமிக்ரான் அலை தமிழகத்தில் முடிவுக்கு வந்துள்ளது.
இதையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு கிட்டதட்ட முற்றிலுமாக வாபஸ் பெறப்பட்டு உள்ளது. கொரோனா இல்லாத தமிழகம் என்ற நிலையை நோக்கி மாநிலம் மெல்லச் சென்று கொண்டு இருக்கிறது.

தினசரி பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த ஜன. 22இல் தினசரி கொரோனா பாதிப்பு 30,700வரை சென்றது. அதன் பின்னர் குறையத் தொடங்கிய கொரோனா இன்று 500க்கு கீழ் குறைந்துள்ளது. இன்று மாநிலத்தில் 63 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் மலேசியாவில் இருந்து திரும்பிய ஒருவர் கேரளா, மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பிய தலா ஒருவர் என மொத்தம் 480 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனா கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 34,48,568ஆக உயர்ந்துள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
தினசரி கொரோனா பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. நேற்று 8,150ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று மேலும் குறைந்து 7,164ஆக குறைந்துள்ளது. அதேபோல ஒரே நாளில் மொத்தம் 1,464 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,03,402ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு
கொரோனா உயிரிழப்புகளும் கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது. ஓமிக்ரான் அலை உச்சத்தில் இருந்த போது தினசரி கொரோனா உயிரிழப்புகள் 50 வரை சென்ற நிலையில், இன்று அது 2ஆக குறைந்துள்ளது. இன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒருவரும் உயிரிழந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,002ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வாரியாக பார்க்கும் போது தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 126 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கோவையில் தினசரி பாதிப்பு 72 பேருக்கும் செங்கல்பட்டில் 55 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிர எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 50ஐ தாண்டவில்லை. ஓமிக்ரான் அலை ஏற்பட்ட சமயத்தில் 20 தாண்டிய பாசிட்டிவ் விகிதம் நேற்று 1க்கு கீழ் குறைந்தது. தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2ஐ தாண்டவில்லை. மாநிலத்தில் சராசரி பாசிட்டிவ் விகிதம் 0.8ஆக குறைந்துள்ளது.
-
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications