தேர்தல் நடத்தை விதிகள், தேர்தல் ஏற்பாடுகள் எப்படியிருக்கு.. மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை
சென்னை: உள்ளாட்சித் தேர்தலின் தயார் நிலை குறித்தும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

தேர்தலின்போது வேட்பாளர்கள் பிரச்சாரம், பொதுக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் கொரோனா நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் வெ பழனிகுமார் தலைமையில் 9 மாவட்டங்களின் தேர்தல் அலுவலர்கள், ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளுடன் அவர் காணொலி காட்சி மூலம் நேற்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அப்போது தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
தற்போது வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களை தமிழக மாநில தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை உறுதி செய்வது, பூத்தில் தேர்தல் அதிகாரிகள் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்வது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது, தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்துவது, பதற்றமான பிரச்சினைக்குரிய வாக்குச் சாவடிகளை அடையாளம் காண்பது, வாக்கு எண்ணிக்கை மையங்களை அமைப்பது, தேர்தலில் வாக்கு பதிவு இயந்திரங்களின் வருகை, வாக்குப் பதிவு, உள்ளிட்ட நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்வது, பறக்கும் படைகளை நியமிப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதித்தோம்.
அது போல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமராக்களை தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளோம். 24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிப்பது குறித்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் அச்சிடுவது குறித்தும் அதிகாரிகளுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications