தமிழகத்தை உலுக்கிய கொடூரம்.. தரமணி கல்லூரி வளாகத்தில் மயான அமைதி! நேரில் விசிட் செய்த ஒன் இந்தியா!
சென்னை: சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வடமாநில இளைஞரும் அவரது குடும்பத்தினரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த கொடூரம் நிகழ்ந்த வளாகத்தில் ஒன்இந்தியா தமிழ் தற்போதைய சூழலை வெளிச்சம் போட்டி காட்டி இருக்கிறது. கல்லூரி அமைந்திருக்கிறது என்ற சுவடே தெரியாமல் மயான அமைதி நிலவுவதாக சொல்கின்றனர் மாணவர்கள்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்த மூவரைக் கொன்ற கொடூர சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிறுவனமாக இருக்க வேண்டிய ஒரு வளாகத்தில், மனிதநேயத்தை உறைய வைக்கும் வகையில் நிகழ்ந்த இந்த கொலைகள், மாநில அளவில் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார், அவரது மனைவி மற்றும் அவர்களது 2 வயது குழந்தை ஆகிய மூவரும், தரமணி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திற்குள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததிலிருந்து, அந்த பகுதி முழுவதும் பதற்றமும், மௌனமும் கலந்த ஒரு சூழல் நிலவி வருகிறது.
மதுபோதையில் இருந்த ஒரு கும்பல், கவுரவ் குமாரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. அந்த கொடூர செயலை தடுக்க முயன்ற கணவர் கவுரவ் குமாரும், அந்த கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதோடு மட்டும் அல்லாமல், இரண்டு வயதே ஆன அவர்களது குழந்தையையும், தரையில் அடித்து கொன்றதாக கூறப்படும் தகவல், சமூகத்தை உறைய வைத்துள்ளது. எந்த தவறும் அறியாத ஒரு குழந்தை கூட இந்த கொடூர வன்முறையிலிருந்து தப்பவில்லை என்பதே, இந்த சம்பவத்தின் பயங்கரத்தன்மையை காட்டுகிறது. கல்லூரி வளாகம் போன்ற இடத்தில் இத்தகைய சம்பவம் நடந்தது எப்படி? பாதுகாப்பு ஏற்பாடுகள் எங்கே? வெளிமாநில தொழிலாளர்கள் அல்லது குடும்பங்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் உருவாகிவிட்டதா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
ஒன் இந்தியா தமிழ் குழு, இந்த கொடூரம் நிகழ்ந்த தரமணி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேரில் ஆய்வு செய்த போது, அங்கு வழக்கமான கல்வி நிறுவன சூழல் இல்லை என்பது தெளிவாக தெரிய வந்தது. மாணவர்கள் சிலர் கூறுகையில், "இது கல்லூரி வளாகம் என்று சொன்னால் நம்ப முடியாத நிலை. எங்கும் பாதுகாப்பு இல்லை. சம்பவம் நடந்த பிறகும் கூட அமைதி அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சுடுகாடு மாதிரி மயான அமைதி நிலவுகிறது" என்றனர்.
அந்த காட்சிகளை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்...
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications