பெயர்: சந்திரசேகர ராவ்.. தற்போதைய மனநிலை - பாஜக எதிர்ப்பு.. எதிர்கால திட்டம் - பிரதமர் நாற்காலி?
சென்னை: தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகப் பேசி வருகிறார். அவருக்கு எதிராக பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்ததற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள் என சந்திரசேகர ராவ் கேட்டது தான் இந்த வாரத்தின் அரசியல் ஹாட் டாப்பிக்.
எந்த முட்டாள் வரியை ஏற்றினார்களோ, அவர்கள் தான் வரியைக் குறைக்க வேண்டும். பாஜகவை கடலில் தூக்கிப் போடவேண்டும் என்று ஒரு மாநில முதல்வர் தடாலடியாகப் பேசியிருக்கிறார் என்றால் அது சந்திரசேகர ராவைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.

சந்திரசேகர ராவ்
தெலுங்கானா என்ற தனி மாநிலம் உருவாக வேண்டும் என பலப்போராட்டங்களை முன்னெடுத்து, அதன் வெற்றியாக, ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து 2014ல் தெலுங்கானா என்ற தனி மாநிலம் உதயமானது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி, தெலுங்கானாவில் ஆட்சி அமைத்தது. புது மாநிலத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கட்டமைப்பு விதிகளையும் சிறப்பாக செய்யத் தொடங்கினார் சந்திரசேகர ராவ்.

பாஜக எதிர்ப்பு
தெலுங்கானாவில் பாஜக வளர்ந்துவிடக்கூடாது என்பதில், மிகத் தீவிரமாக இருக்கிறார் சந்திர சேகர ராவ். தேசியக் கட்சிகள் தெலுங்கானாவில் வளர்ந்துவிடக்கூடாது என 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே ஆட்சியைக் கலைத்துவிட்டு, தேர்தலை நடத்த முடிவெடுத்தார் ராவ். சொந்த கட்சியில் இருந்து ஒரு முக்கிய உறுப்பினர் பாஜகவில் இணைந்ததில் இருந்தே பாஜகமீது வெறுப்பில் இருந்தார் ராவ்.

தேசிய தலைவர்
தன்னை ஒரு தேசியத் தலைவாராக முன்னிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் சந்திரசேகர ராவ். அதன் ஒரு பகுதியாகவே பாஜக எதிர்ப்பை முன்னெடுத்திருக்கிறார் என்கிறார்கள் வல்லுனர்கள். இந்தியா முழுவதும் பாஜக எதிர்ப்பு மனநிலை ஆரம்பித்திருக்கிறது, இதனைப் பயன்படுத்தி, தனக்கு சாதகமான முடிவை எடுக்கவே பாஜகவை எதிர்த்து வருகிறார் ராவ்.

மாநிலம்
தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் என பாஜகவுக்கு எதிராகவும், ஒடிசா கோவா என சில மாநிலத்தில் உள்ள கட்சிகள் தொடர்ந்து பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இவர்களின் கூட்டு முயற்சியில் தன்னை ஒரு பெரும் தலைவராக காட்ட அனைத்து தலைவர்களையும் ஏற்கெனவே சந்தித்தார் ராவ். ஆனால் அது கைகூடவில்லை. இந்தநிலையில், அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் இதை முடித்துக்காட்டவே தேசிய அளவில் கவனம் செலுத்தி வருகிறார்.

மம்தா பானர்ஜி
தெற்கில் சந்திரசேகர ராவ் தேசிய தலைவராக உருவெடுக்க நினைப்பது போல், மேற்கில் மம்தா பானர்ஜியும் தேசியத் தலைவராவதற்கான அடித்தளத்தை அமைத்து வருகிறார். சொல்லப்போனால், சந்திர சேகரராவுக்கு முன்னரே மம்தா இதைக் கையில் எடுத்துவிட்டார். இருவருடைய ஒரே குறிக்கோள் தேசிய அளவில் ஒரு அணி அமைத்து செயல்படுவதுதான், இருவருக்கும் கையிலெடுத்திருக்கும் யுத்தி பாஜக எதிர்ப்பு தான். இப்போது இவர்கள் இருவருக்குமே ஒரு பனிப்போர் நிலவுவதாகவும் அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் ஆசை
தனக்கு நெருக்கமான அனைத்து தலைவர்களையும் தனித்தனியாக அழைத்துப் பேசி வருகிறார் சந்திர சேகர ராவ். சொந்த மாநிலத்திலும் பாஜகவை வளரக்கூடாது, அதேநேரம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் தன்னை ஒரு தேசிய தலைவராக வந்து, பிரதமர் ஆகும் திட்டத்தில் இருக்கிறார் சந்திரசேகர ராவ். பிரதமர் கனவின் ஆசையில் இருப்பதால், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், விவசாயிகள் பிரச்னை என பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை இப்போதே தொடங்கிவிட்டார் சந்திரசேகர ராவ்.
-
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications