Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்னம்மா கூட சேர்ந்து வேலை பாருங்க! உத்தரவிட்ட ஓபிஎஸ்? தேனி சையது கான் கூறிய பரபர தகவல்! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக முன்னாள் அவைத் தலைவர் மதுசூதனின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மலர் தூவி மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் தேனி மாவட்ட நிர்வாகிகள் இணைந்து பணியாற்ற வேண்டுமென உத்தரவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் ஓபிஎஸ் அப்படி கூறவில்லை என ஓபிஎஸ் ஆதரவு தேனி மாவட்ட செயலாளரான சையது கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சின்னம்மா கூட சேர்ந்து வேலை பாருங்க! உத்தரவிட்ட ஓபிஎஸ்?

    அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்திற்கு இடையே ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இணைந்து செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி நிற்கிறது.

     எடப்பாடி பழனிச்சாமி

    எடப்பாடி பழனிச்சாமி

    அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மாதிரியான நிகழ்வுகள் நடைபெறவில்லை, அதே நேரத்தில் சசிகலாவின் தீவிர ஆதரவாளரான ஓபிஎஸ் இன் தம்பி ஓ ராஜா இது குறித்து தூது சென்றதாக கூறப்படுகிறது.

    அதிமுக பொதுக்குழு

    அதிமுக பொதுக்குழு


    இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வரும் நிலையில் தற்போது டிடிவி தினகரன் சசிகலா ஓபிஎஸ் ஆகிய மூவரின் சந்திப்பு விரைவில் நடைபெறும் எனவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிமுகவில் புதிய அணியை திரட்டி எடப்பாடியை வெளியேற்றும் நடவடிக்கைகள் இருக்கும் எனவும் அடுத்தடுத்து யூகங்கள் வெளியாகின.

    சசிகலா, டிடிவி தினகரன்

    சசிகலா, டிடிவி தினகரன்

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனிக்குச் சென்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரும் தற்போது தேனி மாவட்ட அதிமுக செயலாளர் பகுதியில் இருந்து நீக்கப்பட்டவருமான சையது கான் சந்தித்து பேசினார் தேனி மாவட்ட எல்லையில் டிடிவி தினகரனை வரவேற்றவர் சிறிது நேரம் பேசினார். இதனால் டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் சந்திப்பு விரைவில் இருக்கும் என கூறப்பட்டது அதிமுகவின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் இதுகுறித்து டிடிவி தினகரன் விளக்கம் அளித்தார்.

    இணைந்து பணி

    இணைந்து பணி

    மேலும் சசிகலாவை சந்திக்கவும் ஓபிஎஸ் தேதியை கூட முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே அதிமுக முன்னாள் அவைத் தலைவரான மறைந்த மதுசூதனனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது நிர்வாகிகளிடையே பேசிய அவர் வருங்காலங்களில் தேனி மாவட்ட நிர்வாகிகள் சசிகலாவுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானது.

    சையது கான் மறுப்பு

    சையது கான் மறுப்பு

    தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிரடி காட்டி வரும் ஓபிஎஸ் சசிகலாவுடன் நேரடியாக கரம் கோர்த்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியான நிலையில் இதனை சையது கான் மறுத்துள்ளார். இதுகுறித்து தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான சையது கான், அதிமுக கழக முன்னாள் அமைச்சர் தலைவர் மதுசூதனன் அவர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் சசிகலாவுடன் இணைந்து தேனி மாவட்ட நிர்வாகிகள் பணியாற்ற வேண்டுமென ஓபிஎஸ் உத்தரவிட்டதாக கூறி பத்திரிகைகளில் வெளியான செய்தி பொய்யானது என்றும் உத்தரவு என்ற வார்த்தையை ஓ பன்னீர்செல்வம் பயன்படுத்தவில்லை எனவும் கூறினார். ஓபிஎஸ் விரைவில் சசிகலாவில் சந்திக்க இருப்பதாக கூறிவரும் நிலையில் சையது கானின் இந்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+