Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமாவளவன் களமிறங்கும் காட்டுமன்னார்கோவில்! 8 விசிக வேட்பாளர்களும் இன்றே வேட்புமனுத் தாக்கல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் இன்று ஏப்ரல் 4-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுடன் இணைந்து கட்சியின் மற்ற 7 வேட்பாளர்களும் இன்றைய நாளிலேயே மனுத் தாக்கல் செய்ய உள்ளதால் தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சித் தலைமையின் முடிவை ஏற்று நிர்வாகிகள் ஒற்றுமையுடன் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் தேர்வில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் தந்திருந்தார்..

Thirumavalavan Kattumannarkoil VCK Nomination 8 VCK Candidates Tamil nadu assembly Election 2026 Tamil Nadu Election 2026 8 2026

கடந்த முறை சிறப்பாகப் பணியாற்றிய ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ். பாலாஜி உள்ளிட்டோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காதது குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் நிர்வாக ரீதியான முடிவுகளே இதற்குக் காரணம் என்றும் கூறியிருந்தார்.

திருமாவளவன் காட்டுமன்னார்கோவில்

குறிப்பாக, நாகை தொகுதி மனிதநேய மக்கள் கட்சிக்குச் சென்றது மற்றும் விருப்பப்பட்ட தொகுதிகள் கிடைக்காத சூழலிலேயே ஆளூர் ஷாநவாஸால் போட்டியிட முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய திருமாவளவன், இது அவரைத் தடுக்கும் முயற்சி அல்ல என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.

அதுமட்டுமல்ல, அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் தலைமையின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் இது குறித்துத் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் திருமாவளவன், வேண்டுகோள் விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.

8 விசிக வேட்பாளர்கள்

இந்நிலையில் தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் இன்று ஒரே நாளில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று ஏப்ரல் 4ம் தேதி அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களும் அந்தந்த தொகுதிகளில் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர்.

இதில் குறிப்பாக, விசிக தலைவர் தொல். திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அவர் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை முறையாகச் சமர்ப்பிக்க உள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து மற்ற 7 தொகுதிகளின் வேட்பாளர்களும் இன்றைய தினமே மனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் நேரடியாகக் களமிறங்குவது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசிக போட்டியிடும் தொகுதிகளில் பலமான வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள திருமாவளவன், விருப்ப மனுக்கள் மூலம் திரட்டப்பட்ட நிதியை வேட்பாளர்களின் முதற்கட்ட தேர்தல் செலவுகளுக்காக ஏற்கெனவே பிரித்து வழங்கியுள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.

தேமுதிக எப்போது மனு தாக்கல்?

புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதன் மூலம் கட்சியில் புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளதாகவும், இந்தத் தேர்தல் முடிவு தமிழக அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஒருபுறம் வேட்புமனுத் தாக்கல் பணிகள் வேகமெடுக்க, மறுபுறம் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணங்களைத் தீவிரப்படுத்தவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.

அதேபோல், கூட்டணி கட்சியான தேமுதிகவின் வேட்பாளர்கள் நாளை மறுநாள் அதாவது வரும் ஏப்ரல் 6ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+