காங்கிரஸின் வெற்றி அல்ல இது.. பாஜகவுக்கு எதிரான தீர்ப்பு.. அதிமுக அதிரடி கருத்து!
Recommended Video

சென்னை: 5 மாநிலத் தேர்தல் வெற்றி என்பது காங்கிரஸின் வெற்றி அல்ல. பாஜகவுக்கு எதிரான மக்களின் தீர்ப்பு இது என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு கசப்பையே கொடுத்துள்ளன. ஆட்சியில் இருந்து வந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானை அது இழந்துள்ளது. சட்டிஸ்கரில் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. தெலுங்கானா, மிசோராமிலும் எதுவும் நடக்கவில்லை. மிசோரமில் முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்துள்ளது மட்டுமே அதற்கு ஆறுதலான விஷயம்.
இந்தத் தேர்தல் முடிவு குறித்து தலைவர்கள் பல்வேறு விதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். பொதுமக்களும் இதுகுறித்த விவாதங்களில் இறங்கியுள்ளனர். இது காங்கிரஸின் வெற்றியா அல்லது பாஜகவின் வீ்ழ்ச்சியா என்ற வாதம் சூடுபிடித்துள்ளது.

பாஜகவுக்கு எதிரான தீர்ப்பு
இந்த நிலையில் அதிமுக தரப்பில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த எம்.பி. ஒருவர் கூறுகையில், இதை காங்கிரஸின் வெற்றியாக பார்க்க முடியாது. மாறாக பாஜகவுக்கு எதிராக மக்கள் அளித்துள்ள அழுத்தம் திருத்தமான தீர்ப்பு. மாற்று இல்லாததால், காங்கிரஸை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

மாநில அரசுகள் மீது அதிருப்தி
ராஜஸ்தானிலும், மத்தியப் பிரதேசத்திலும், சட்டிஸ்கரிலும் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. காரணம் அந்த மாநில அரசுகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்ததால். இது இயல்பானது. இதை தேசிய அளவில் பார்க்க வேண்டியதில்லை.

தெலுங்கானாவில் வெல்லலையே
காங்கிரஸ் அலை வென்றது என்று கூறினால் ஏன் தெலுங்கானாவில் காங்கிரஸ் வெல்லவில்லை. அங்கு பெரிய கூட்டணியுடன்தானே காங்கிரஸ் போட்டியிட்டது. மிசோரமில் ஏன் ஆட்சியை இழந்தது. எனவே இது காங்கிரஸின் வெற்றி அல்ல. மாறாக பாஜகவுக்கு எதிரான தீர்ப்பு என்று அவர் கூறியுள்ளார்.

எதிரொலிக்கும்
மேலும் அவர் கூறுகையில் இந்த தாக்கமானது நிச்சயம் லோக்சபா தேர்தலிலும் இருக்கும். அதை மறுக்க முடியாது. பாஜக மீதான மக்கள் அதிருப்தியால் நிச்சயம் பாஜக அல்லாத மற்ற கட்சிகளுக்கு லாபம் கிடைக்கவே செய்யும் என்றார் அவர்.

தமிழகத்தில் பலத்த அடி
அந்த எம்பி மேலும் கூறுகையில் கடந்த 2014 லோக்சபா தேர்தலின்போது தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர தேமுதிக, பாமக, மதிமுக ஆகியவை கிடைத்தன. ஆனால் இந்த முறை ஒரு கட்சி கூட கிடைக்காது என்றார். அதிமுக சேருமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் 2014 தேர்தலில் பாஜகவுடன் சேருவதில்லை என்ற முடிவை அம்மா எடுத்தார். அம்மா வழியிலதான் நாங்களும் பயணிப்போம் என்றார் அவர்.
-
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள்! போட்ட கண்டிஷன் என்னாச்சு? காங்கிரஸுக்கு ஸ்ரீநிதி கேள்வி -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம்












Click it and Unblock the Notifications