48-வது நினைவு தினம்.. தந்தை பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை.. டுவிட்டரில் புகழாரம்!
சென்னை: பகுத்தறிவுப் பகலவன், சமூக நீதி தந்தை என்று அழைக்கப்படும் தந்தை பெரியாரின் 48-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் தந்தை பெரியாருக்கு தமிழக அரசியல் தலைவர்கள் புகழ்மாலை சூட்டி வருகின்றனர்.
தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை சிம்சன் சிக்னல் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் தமிழகத்தின் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதனை தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் '' ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் வழி எனத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் நினைவுநாளில், ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை வென்று - திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம்'' என்று கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications