Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல் பரிசு பொருட்கள் தரமில்லையென புகார்.. உடனே ஆக்ஷன் எடுத்த ஸ்டாலின்.. அதிகாரிகளுக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழக்கங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவில் இந்த பொருட்கள் வழங்கப்படுகின்றன.

Recommended Video

    Pongal Thoguppu 2022 | Pongal Gift எப்படி இருக்கு? | Oneindia Tamil

    பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கரும்பு ஆகிய 21 பொருட்கள் வழங்கப்படுகின்றன.

    பொங்கல் பரிசு தொகுப்பு

    பொங்கல் பரிசு தொகுப்பு

    இதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதில் வழங்கப்படும் தேதி குறிப்பிடபட்டு இருக்கும். அந்த நாளில் சென்று பொருட்கள் வாங்கி கொள்ளலாம். தற்போது கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலேயே டோக்கன் முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பொருட்கள் தரமாக இல்லை என்று புகார்

    பொருட்கள் தரமாக இல்லை என்று புகார்

    இதற்கிடையே சில இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமாக இல்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்தன. இது தொடர்பாக சட்டமன்றத்திலும் அதிமுக புகார் கூறியது. பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் தரமாக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரடியாக குற்றம்சாட்டினார்.

    முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு

    முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு

    இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் அனைவருக்கும் தரமான பொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூட்டுறவுத்துறை, உணவுத்துறை அதிகாரிகளும், பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள குழுவினரும் தரமான பொருள் மக்களுக்கு கிடைக்கிறதா? என்பதை உறுதிபடுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் அறிவுறுத்தல்

    எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் அறிவுறுத்தல்

    மேலும், மாவட்ட கலெக்டர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் தரமான பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும். இதில் தவறு செய்பவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+