விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!
சென்னை: தோழமை கூட்டணி கட்சிகள் உடனான பேச்சுவார்த்தையை நாளைக்குள் முடிக்க திமுக தலைமை பேச்சுவார்த்தை குழுவிடம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விசிகவுக்கு 8 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக திமுக நேரடியாக 160 தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் 175 இடங்கள் வரை களமிறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
2021 சட்டசபைத் தேர்தலில் திமுக நேரடியாக 173 தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் 188 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இணைந்துள்ளன. இதனால் புதிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட், தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல் முஸ்லீம் லீக் மற்றும் மமக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இதையடுத்து தோழமை கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பிப்ரவரி 22ஆம் தேதியில் இருந்து திமுக மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே தேமுதிகவுக்கு 10 தொகுதிகளும், மக்கள் நீதி மய்யம், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், கருணாஸ், தமீமுன் அன்சாரி, ஆதித்தமிழர் பேரவை, தவாக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்வதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் தேமுதிகவை காரணம் காட்டி விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதாக சொல்லப்படுகிறது. இதன்பின் திமுகவின் சீனியர்கள் பலரும் அந்தந்த கட்சித் தலைமையுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். இதற்கு பலன் கிடைத்துள்ளது.
விசிக 8 தொகுதிகளுக்கும், சிபிஐ 6 தொகுதிகளுக்கும் ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் மதிமுக சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பிடிவாதம் காட்டுகிறது. இதனால் அந்தக் கட்சிக்கு 4 தொகுதிகளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக 160 தொகுதிகளுக்கு குறையாமலும், உதயசூரியன் சின்னம் 175 தொகுதிகளிலும் களமிறங்கக் கூடும் என்று தெரிகிறது.
திருச்சியில் பிரதமர் மோடி தலைமையில் என்டிஏ பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதனால் நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிவு செய்து, திமுக கூட்டணி கட்சிகளுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். இதனால் அடுத்த 2 நாட்களுக்கு அண்ணா அறிவாலயம் பரபரப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
-
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம் -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!










Click it and Unblock the Notifications