காங்கிரஸார் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்! கெஞ்சும் கே.எஸ்.அழகிரி! பின்னணி இது தான்!
சென்னை: வரும் 28-ம் தேதி காங்கிரஸ் கட்சி 137-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அன்பு வேண்டுகோள் ஒன்று விடுத்திருக்கிறார்.
காங்கிரஸ் துவங்கப்பட்ட தினத்தை முன்னிட்டு பட்டிதொட்டியெங்கும் கட்சிக் கொடிகளை ஏற்றி 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

55 ஆண்டுகள்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உதயமாகி 136-வது ஆண்டை நிறைவு செய்து, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி 137-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. காங்கிரஸ் கட்சியின் வலிமையை முன்னிலைப்படுத்தவும், காங்கிரஸ் தலைவர்களின் பெருமையை வெளிப்படுத்தவும் நமக்கு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.

கொண்டாடுக
இந்த சந்தர்ப்பத்தில், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களிடையே பரப்புகிற வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவன நாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட வேண்டும்.

கட்சிக்கொடி
காங்கிரஸ் நிறுவனநாள் நிகழ்ச்சிகள் கட்சியின் அனைத்து நிலைகளிலும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம கமிட்டிகள் வரை, டிசம்பர் 28 ஆம் நாளை இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவன நாளாக மிகச் சிறப்பாக நிகழ்ச்சிகளை அமைத்து கொண்டாட வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் முதல் கிராமங்கள் வரையிலும், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களிலும் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

அன்பு கோரிக்கை
காங்கிரஸ் கட்சியின் முன்னோடிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள் துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் முழுமையான ஈடுபாட்டுடன் வரும் டிசம்பர் 28 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாளை மிகச் சிறப்பாக நடத்தும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சத்தியமூர்த்தி பவன்
இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவன நாளான டிசம்பர் 28 அன்று, சென்னை சத்தியமூர்த்தி பவன் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள 150 அடி உயர கொடிக் கம்பத்தில், காலை 9 மணிக்கு காங்கிரஸ் கொடியை ஏற்ற இருக்கிறேன். அங்கு சேவாதள அணிவகுப்பு மரியாதையும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களாக இருந்தவர்களின் திருவுருவப் படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்துகிற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications