Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாரெல்லாம் ஜூலை 31-க்கு பிறகு வருமான வரியை தாக்கல் செய்யலாம்? ஐடிஆர் தாக்கல் செய்ய இன்றே கடைசி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்டு வருமான வரிக்கணக்கை செலுத்துவதற்கு ஜூலை 31ஆம் தேதியான இன்றே கடைசி நாளாகும்... இன்றைக்குள் வருமான வரியை தாக்கல் செய்யாவிட்டால் என்னாகும்? ஜூலை 31-க்கு பிறகு யாரெல்லாம் வருமான வரித் தாக்கல் செய்யலாம் தெரியுமா?

கடந்த மார்ச் மாதத்தோடு வருட இறுதிக்கணக்கு முடிவடைந்த நிலையில் 2023-2024 ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும்படி வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது... இதற்காக வழக்கம்போலவே, ஜூலை 31ம் தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்திருந்தது..

ITR Income Tax Tax

அரசு ஊழியர்கள்: இதையடுத்து, அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் கடந்த சில நாட்களாகவே வருமான வரி கணக்கை தாக்கல் செய்து வருகிறார்கள்.. இன்றுடன் கடைசி நாள் என்பதால், எல்லாருமே உடனடியாக வருமான வரித்தாக்கல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த வருடம் ஜூலை 25ம் தேதி சுமாா் 4 கோடி போ் வருமான வரி தாக்கல் செய்திருந்தனர். ஆனால், இந்த முறை, வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளதாக, நேரடி வரிகள் வாரியத் தலைவா் ரவி அகா்வால் கூறியிருந்தார். அதேபோல, கடந்த வருடம், வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் முடியும்போது, சுமாா் 7.5 கோடி போ் தாக்கல் செய்தனா். ஆனால், இந்த முறை, இந்த எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்றே தெரிகிறது.

அபராதம்: இன்று ஜூலை 31க்குள் வருமான வரியை தாக்கல் செய்யத் தவறினால் என்ன நடக்கும் தெரியுமா? காலக்கெடுவுக்குள் வரியை சமர்க்க தவறுபவர்களுக்கு அபராதத்துடன் கூடிய ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.. அதன்படி 31 டிசம்பர் 2024க்கு தாக்கல் செய்யலாம். கணக்குகளைத் தணிக்கை செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவோருக்கு மட்டும் இந்தக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதனையும் கடந்து வருமான வரியை தாக்கல் செய்யவில்லையானால், அது தானாகவே புதிய வரி விதிப்பு முறைக்கு மாற்றப்படும்.

ஒருவேளை ஜூலை 31 ம் தேதிக்குள் வருமான வரியைத் தாக்கல் செய்யத் தவறினால் வருமான வரிச்சட்டம் 234F பிரிவின்படி, தாமதமாகத் தாக்கல் செய்வதற்கான கட்டணம் 5000 ரூபாய் விதிக்கப்படும்.

யாரெல்லாம் தாக்கல் செய்யலாம்: 5 லட்சம் ரூபாய் வரை வரிக்குட்பட்ட வருமானம் இருந்தால் அதிகபட்சமாக 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். வரிக்குட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அதிகபட்சமாக 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல, தணிக்கைக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவோருக்கு வருமான வரித்துறை 3 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்குகிறது. இதன் மூலம், சம்பந்தப்பட்ட நபர்களோ, தொழில் நிறுவனங்களோ கணக்கு தணிக்கையை முடித்த பின் வருமான வரித் தாக்கல் செய்யலாம்.

வரித்தாக்கல்; எனவே, சர்வதேச பரிவர்த்தனைகளில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களுக்கு விரிவான தணிக்கை தேவை என்பதால், நவம்பர் 30-ம் தேதி வரை வருமான வரித் தாக்கல் செய்யலாம். உள்நாட்டு நிறுவனங்களிலும் கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க வேண்டிய நிறுவனங்கள், கூடுதல் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டிய நிறுவனங்கள் ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகும் வருமான வரித்தாக்கல் செய்யலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+