சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை?
சென்னை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு வழங்க தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டும் வென்றது. தேர்தல் தோல்வி குறித்து ஆராயவில்லை என குற்றம்சாட்டிய சில எம்எல்ஏக்கள் எஸ்பி வேலுமணி- சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியாக பிரிந்தனர்.

அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 பேரும் வேலுமணி அணியில் 25 எம்எல்ஏக்களும் செயல்பட்டு வந்தனர். சட்டசபையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேலுமணி அணி ஆதரவு தெரிவித்திருந்தது.
தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு கொறடா உத்தரவை வேலுமணி தரப்பு மீறியது. இதனால் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது வேலுமணி தரப்புக்கு இடம் வழங்கப்படும் என சொல்லப்பட்டது. இதற்கு தவெகவுக்கு ஆதரவு கொடுத்த திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன. இதனால் அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அந்த அணியில் இருந்த 4 எம்எல்ஏக்கள்- மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். அவர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் சிலர் எடப்பாடி பழனியிடம் மீண்டும் சென்றுவிட்டனர். வேலுமணியும் எடப்பாடி பழனிசாமியிடம் சென்றுவிட்டார். ஆனால் முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம் செல்லவில்லை.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால் விஜயபாஸ்கரோ, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் என கூறிவிட்டார்.
இந்த நிலையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்கப்படும் என தவெகவின் முக்கிய நிர்வாகிகள், சண்முகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இதனால் அவர் விரைவில் ராஜினாமா செய்துவிடுவார் என சொல்லப்படுகிறது. அப்படி செய்தால் தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என சொல்லப்படுகிறது.
தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சி நடத்தலாம் என பேச்சுவார்த்தை எழுந்தது சிவி சண்முகத்திற்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. எம்ஜிஆர் கட்சி தொடங்கியதே திமுகவை எதிர்த்துதான் என்கிற போது திமுகவுடன் எப்படி கூட்டணி வைத்து ஆட்சி செய்வது என்பதுதான் இவர்களது கேள்வியாக இருக்கிறது.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி












Click it and Unblock the Notifications