"தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம்!" ஆயுத பூஜையை மட்டும் கொண்டாடிவிட்டு புஸ்ஸி ஆனந்த் அறிவுரை!
சென்னை: தவெக நிர்வாகிகள் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான உத்தரவை தவெக தலைவர் விஜய் பிறப்பித்துள்ளாராம்.
இதுகுறித்து புஸ்ஸி ஆனந்த் கூறியிருப்பதாவது: "இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை தவெக நிர்வாகிகள் யாரும் கொண்டாட வேண்டாம். கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபாவளி கொண்டாட்டங்களை தவிர்த்துவிடலாம். தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்பேரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களை தவிருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு சென்னை நீலாங்கரை வீட்டிற்கு வந்த விஜய், 3 நாட்கள் கழித்து கரூரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி என கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த கரூர் சம்பவம் நடந்து முடிந்த 4 நாட்களில் ஆயுத பூஜை வந்தது.
அப்போது விஜய்யின் பிரச்சார வாகனம், கார்கள் உள்ளிட்டவைகளுக்கு பனையூர் அலுவலகத்தில் பூஜை போடப்பட்டிருந்தது. 41 உயிர்களை காவு வாங்க காரணமாக இருந்த அந்த வாகனத்திற்கு பூஜை போட்டிருப்பதை பலர் விமர்சித்தனர். அந்த பெரிய வாகனம் கூட்ட நெரிசலில் நுழைந்ததால்தான் அதற்கு வழிவிட முண்டியடித்த போது பலர் கீழே விழுந்து உடல் நசுங்கி பலியாகிவிட்டனர்.
ஆயுத பூஜையை கொண்டாடிவிட்டு தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என புஸ்ஸி ஆனந்த் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கேதார கவுரி நோன்பு இருப்போர் 21 ஆம் தேதி அதிரசம் செய்து நோன்பிருப்பது அவசியம். இது தங்கள் கணவனுக்கு தீர்க்காயுளை கொடுக்க வேண்டியும் திருமாங்கல்யம் நிலைத்து நிற்பதற்காகவும் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஓங்கவும் அனுசரிக்கப்படும் ஒரு விரதமாகும்.
இதை திருமணமான பெண்கள் கடைப்பிடிப்பார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகிறார்கள். கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
TN 2026 ட்ரெய்லரை பார்த்து கொளுத்தி போட்ட ஆதவ்.. விஜயை வைத்து பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி! -
தவெக தலைவர் விஜய் விஜயகாந்த் போல தாக்கத்தை ஏற்படுத்துவார்.. மதுரையில் டிடிவி தினகரன் பேட்டி -
ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய விஜய்.. கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து கிரேட் எஸ்கேப்! -
வேட்புமனு விஷயத்தில் பயங்கரமாக சொதப்பும் விஜய்.. எக்கச்சக்க பிழைகள்! நிராகரிக்க நிறைய வாய்ப்பு -
வில்லிவாக்கம் பெரிய ஏரியா கிடையாது.. நாளைக்கு விஜய் எப்படி சமாளிக்கப்போகிறார்? பதறும் பெற்றோர்கள்! -
அடேங்கப்பா.. விஜய் ரெக்கார்டு.. பிரமாண பத்திரத்தை டவுன்லோடு செய்து பார்த்தவர்கள் எண்ணிக்கை இவ்வளவா? -
Vijay: புதுச்சேரியிலும் திருந்தாத ரசிகர்கள்! விஜய்யை பார்க்க சாலை விதிகளை மீறும் தவெகவினர்! -
விஜய் தேர்தலில் தோல்வி அடைந்த பின்.. அந்த விஷயம் நடக்கும் பாருங்க.. அடித்து சொல்லும் பியூஷ் கோயல்! -
நடிகர் அரசியல்வாதியாக கூடாதா? அதுவும், ஓம் சக்தி... பராசக்தி டயலாக்.. வில்லங்க கேள்விக்கு MS பாஸ்கர் பதிலடி -
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை












Click it and Unblock the Notifications