முடங்கிய ட்விட்டர்.. ரீலோட் செய்வதில் பிரச்சனை..நாளை ‛ப்ளூடிக்’ கட்டணம் அமலாகும் நிலையில் பிரச்சனை
சென்னை: இந்தியாவில் மாலை 7 மணி முதல் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் வசித்து வரும் பயனாளர்களுக்கு ட்விட்டர் பக்கம் செயல்படாமல் முடங்கியது. ரீலோட் செய்வதில் பலருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. நாளை ‛ப்ளூடிக்' அம்சத்துக்கு கட்டணம் வசூல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று பயனாளர்கள் அவதிக்குள்ளாகினர்.
உலகில் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இவர் ட்விட்டர் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கினார்.
இதன் தொடர்ச்சியாக அவர் ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தின் செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்பட ஏராளமானவர்களை அதிரடியாக நீக்கினார்.

நாளை முதல் ப்ளூடிக் கட்டணம்
அதன்பிறகு ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை குறிப்பிடும் வகையில் ‛ப்ளூடிக்' வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அவர் அறிவித்தார். அதன்படி ப்ளூடிக் பெற்றவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கு ட்விட்டர் பயனாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கட்டண நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ப்ளூடிக் கட்டண முறை நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

2 வகைகளில் கட்டணம்
இதில் 2 வகைகளில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. ‛ஆன்ட்ராய்டு' பயன்படுத்துவோருக்கு மாதம் 8 டாலரும், ஐஓஎஸ் பயன்பாட்டாளர்களுக்கு 11 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.907) கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ப்ளூடிக் பயனாளர்கள் 1080p வீடியோக்களை பதிவிடவும், ட்வீட்களை எடிட் செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

முடங்கிய ட்விட்டர் செயல்பாடு
இந்நிலையில் ஒரு நாளுக்கு முன்னதாக இன்று இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் ட்விட்டர் பக்கம் திடீரென்று இயங்காமல் முடங்கியது. அதன்படி இன்று மாலை 7 மணி முதல் ட்விட்டரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ட்விட்டர் பக்கத்தை ரீலோட் செய்ய முடியாத வகையில் ட்விட்டர் வலைதளம் முடங்கியது. இதுபற்றி ‛டவுன்டிடேக்டர்' எனும் வலைதளம் 7.15 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பிரச்சனை ஏன்?
இந்தியாவில் செல்போன் மற்றும் டெஸ்க்டாப் வெர்சன் என இரண்டு வகையிலான ட்விட்டர் பயன்பாடும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் பலரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். 64 சதவீத ட்விட்டர் பயனாளர்கள் ட்விட்டர் செயலியால் இந்த பிரச்சனை உருவானதாக கூறிய நிலையில், 34 சதவீதம் பேர் ட்விட்டர் இணையதள பிரச்சனையால் சிரமத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காரணம் என்ன?
இதன் தொடர்ச்சியாக மீண்டும் தற்போது ட்விட்டர் வலைதளம் செயல்பட துவங்கி உள்ளது. இருப்பினும் ட்விட்டர் பக்கம் செயல்படாமல் இருந்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றிய எந்த தகவலும் தற்போது வரை பகிரப்படவில்லை. இருப்பினும் தொழில்நுட்ப கோளாறு, சர்வர் பிரச்சனை உள்ளிட்டவற்றால் ட்விட்டர் செயல்பாடு பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியபிறகு தற்போது 2வது முறையாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் 4ம் தேதி ட்விட்டர் ‛டெஸ்க்டாப்' வெர்சனில் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications