குவியும் புகார்கள்! முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அடுத்தடுத்து புகார்கள்.. விரைவில் கைது?
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் அவர் மீது பண மோசடி புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஆட்சி சமயத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் கூறி பரபரப்பைக் கிளப்பியவர்.
அமைச்சராக இருந்த சமயத்தில் ஆவின் உட்பட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி இவர் பண மோசடியில் ஈடுபட்டதாக அடுக்கடுக்கான புகார்கள் கிளம்பியது.

ராஜேந்திர பாலாஜி
திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும், இரண்டு பேர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகார் அளித்தனர். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, ராஜேந்திர பாலாஜி ரூ 3 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேர் மீது மொத்தம் 5 பிரிவுகளில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜாமீன் மனு
அவரை கைது செய்யத் தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இதனால் எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென தலைமறைவானார். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவியும் புகார்
இந்தச் சூழ்நிலையில், ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 3 பேர் பண மோசடி புகார் அளித்துள்ளனர். சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்த குணா தூயமணி தனது மகனுக்கு ஏ.பி.ஆர்.ஓ. வேலை பெறுவதற்கும், மதுரை வில்லாபுரம் மீனாட்சி சுந்தரம் என்பவர் மாநகராட்சி அலுவலக உதவியாளர் வேலை பெறுவதற்கும் ராஜேந்திர பாலாஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகப் புகார் அளித்துள்ளனர். இதுதவிர ராஜேந்திர பாலாஜி மீது மற்றொரு புகாரும் பெறப்பட்டுள்ளது.

8 தனிப்படைகள்
கடந்த 17ஆம் தேதி முதல் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய மொத்தம் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் ஜாமீன் பெறுவதற்கு முன்னதாக கைது செய்ய வேண்டும் என போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், சமீபத்தில் அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸூம் அளிக்கப்பட்டது.

கைது செய்ய முடியவில்லை
இது மட்டுமின்றி செல்போன் சிக்னல் மூலம் ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடத்தை கண்டறிந்து கைது செய்யும் முயற்சியிலும் தமிழ்நாடு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவருடன் தொடர்பில் இருந்த 600 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இவர்களது செல்போன்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், இதையெல்லாம் தாண்டியும் ராஜேந்திர பாலாஜியை தமிழக போலீசாரால் கைது செய்ய முடியவில்லை.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications