Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி - எச் வசந்தகுமாரின் பேச்சு வைரல்

கொரோனா வைரஸ் நோயினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இரண்டாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று எச். வசந்தகுமார் லோக்சபாவில் பேசியது வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்பி வசந்த குமார் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். எச். வசந்த குமார் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் நோயை தேசிய பேரிடராக குறிப்பிட்டு பேசியுள்ளார். அவரது பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    தமிழகத்தின் பிஸ்னஸ் மேக்னட்.. யார் இந்த வசந்தகுமார்!? | Oneindia Tamil

    எம்எல்ஏவாக இருந்த போதே அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு கன்னியாகுமாரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று டெல்லி சென்றவர் எச்.வசந்தகுமார். தனது கருத்தை லோக்சபாவில் பதிவு செய்து விட்டுத்தான் அமர்வார் வசந்தகுமார். எத்தனை நேரமானாலும் காத்திருந்து பேசுவார் என்று அவருடன் லோக்சபாவிற்கு சென்றவர்கள் கூறியுள்ளனர்.

    Vasanthakumars Lok Sabha speech viral video

    கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எச். வசந்தகுமாருக்கு கொரோனா நெகடிவ் என ரிசல்ட் வந்த பின்னரும் உடல் நலம் குணமடையவில்லை. நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் அதிகமாகியே மரணமடைந்துள்ளார். அவரது மறைவு அரசியல் கட்சித்தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    எச். வசந்தகுமார் மக்களோடு மக்களாக பயணிப்பவர், எந்த நேரத்திலும் எளிமையாக சந்திக்கக் கூடிய அரசியல் தலைவர் என்றெல்லாம் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் அவர் கடந்த மார்ச் மாதத்தில் லோக்சபாவில் எச். வசந்தகுமார் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

    அவரது உரையில் கொரோனா வைரஸ் நோயை தேசிய பேரிடராக அறிவித்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தினசரி கூலி தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளுக்கு மாதம் ரூ. 2000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பேசியுள்ளார். அவரது நேரம் முடிவடைந்து விட்டது என்று சபாநாயகர் பொறுப்பில் இருப்பவர் கூறியும் அனுமதி பெற்று தனது உரையை பேசி முடித்துவிட்டுதான் அமர்கிறார் வசந்தகுமார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    மறைந்த எச். வசந்தகுமாரின் உடல் இன்றைய தினம் சென்னையில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தொகுதி மக்கள் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+