கொரோனா: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி - எச் வசந்தகுமாரின் பேச்சு வைரல்
கொரோனா வைரஸ் நோயினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இரண்டாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று எச். வசந்தகுமார் லோக்சபாவில் பேசியது வைரலாகி வருகிறது.
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்பி வசந்த குமார் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். எச். வசந்த குமார் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் நோயை தேசிய பேரிடராக குறிப்பிட்டு பேசியுள்ளார். அவரது பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
எம்எல்ஏவாக இருந்த போதே அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு கன்னியாகுமாரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று டெல்லி சென்றவர் எச்.வசந்தகுமார். தனது கருத்தை லோக்சபாவில் பதிவு செய்து விட்டுத்தான் அமர்வார் வசந்தகுமார். எத்தனை நேரமானாலும் காத்திருந்து பேசுவார் என்று அவருடன் லோக்சபாவிற்கு சென்றவர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எச். வசந்தகுமாருக்கு கொரோனா நெகடிவ் என ரிசல்ட் வந்த பின்னரும் உடல் நலம் குணமடையவில்லை. நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் அதிகமாகியே மரணமடைந்துள்ளார். அவரது மறைவு அரசியல் கட்சித்தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
எச். வசந்தகுமார் மக்களோடு மக்களாக பயணிப்பவர், எந்த நேரத்திலும் எளிமையாக சந்திக்கக் கூடிய அரசியல் தலைவர் என்றெல்லாம் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் அவர் கடந்த மார்ச் மாதத்தில் லோக்சபாவில் எச். வசந்தகுமார் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
அவரது உரையில் கொரோனா வைரஸ் நோயை தேசிய பேரிடராக அறிவித்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தினசரி கூலி தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளுக்கு மாதம் ரூ. 2000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பேசியுள்ளார். அவரது நேரம் முடிவடைந்து விட்டது என்று சபாநாயகர் பொறுப்பில் இருப்பவர் கூறியும் அனுமதி பெற்று தனது உரையை பேசி முடித்துவிட்டுதான் அமர்கிறார் வசந்தகுமார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
On 20th March Kanyakumari MP #Vasanthakumar ji in his Lok Sabha speech kept demand of declaring #COVIDー19 as "National Disaster"..
— Niraj Bhatia (@bhatia_niraj23) August 28, 2020
He spoke also for direct benifit transfers to daily wagers & to help small businesses ..
He was interrupted with laugh within few secs..
RIP sir🙏 pic.twitter.com/L5ezM2b6l4
மறைந்த எச். வசந்தகுமாரின் உடல் இன்றைய தினம் சென்னையில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தொகுதி மக்கள் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications