தனியாருக்கு இணையாக அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டணம்... வேல்முருகன் குற்றச்சாட்டு..!
சென்னை: தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு இணையாக கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரியில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இத்தகைய போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கூட்டணிக் கட்சியான திமுகவின் ஆட்சி நடைபெற்றாலும் கூட, இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது;

கட்டணம் வசூல்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோரிக்கை மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக, இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை, கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகப் பெயர் மாற்றம் செய்து கடந்த 2020-ல் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கும், இனிமேல் பயிலும் மாணவர்களுக்கும், மற்ற அரசு மருத்துவக்கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பெற்றோர் அதிர்ச்சி
ஆனால், 2020 - 2021 கல்வியாண்டில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, சுயநிதிக் கல்லூரிகள் போன்று, ஆண்டிற்கு 4 இலட்சம் என்ற கணக்கின் படி, 5 ஆண்டுகளுக்கு கட்ட வேண்டும் என கடந்த 26.10.2021 அன்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

சமூக நீதிக்கு எதிராக
குறிப்பாக, கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு 13,610 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், மற்ற மாணவர்களுக்கு தலா ரூ.4 இலட்சம் வசூலிப்பது ஏற்க முடியாதது. ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இரு விதமான கட்டணம் என்பது சமூக நீதிக்கு எதிரானது. அதாவது, 2021 - 2022 ஆம் கல்வியாண்டு முதல் அரசால் நடத்தப்படும் கல்லூரிக்கு, சுயநிதிக் கல்விக்கட்டணம் என்பது ஏற்புடையது அல்ல.

மாணவர்கள் நலன்
எனவே, கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள், ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை கருத்தில் கொண்டும், மாணவர்களின் எதிர்க்காலத்தில் அக்கறைக்கொண்டும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications